TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


'மச்சான்'ஸுக்கு புது அர்த்தம் சொல்லும் நமீதா!

Posted: 27 Feb 2012 01:58 AM PST


'மச்சான்'ஸுக்கு புது அர்த்தம் சொல்லும் நமீதா!

நடிகை நமீதாவுக்கு பிடித்த தமிழ் வார்த்தை மச்சான்ஸ் என்கிற 5 எழுத்து தான். அதற்கு நட்பு என்று அவர் அகராதியில் அர்த்தமாம்.


நடிகை நமீதா எந்த விழாக்களுக்கு வந்தாலும் சரி, உடனே கூட்டத்தைப் பார்த்து ஹாய் மச்சான்ஸ் என்று கொஞ்சும் தமிழி்ல சொல்லி, ரசிகர்களை நோக்கி ஒரு பறக்கும் முத்தம் கொடுப்பார். உடனே கூட்டத்தில் பயங்கர விசில் மற்றும் கைத்தட்டல் ச்ததம் கண்டிப்பாக கேட்கும்.


அந்த முத்தத்தைப் பிடிக்க ரசிகர்கள் முந்தியடிப்பார்கள். எப்பொழுதுமே ரசிகர்களை மச்சான்ஸ் என்றே இனிக்க, இனிக்க அழைப்பார். இப்படித் தான் அம்புலி பாடல் வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஹாய் மச்சான்ஸ் என்று அழைத்து பறக்கும் முத்தம் கொடுக்க அது அதே மேடையில் இருந்த இயக்குனர் சேரனை கடுப்பாகிவிட்டது.


"என்ன இந்தப் பொண்ணு இப்படி பேசிட்டுப் போகுது... ரசிகர்களை மச்சான்கள் என்கிறார். அதை கேட்டு எல்லோரும் கை தட்டி விசில் அடிக்கிறீர்கள். பொதுமேடையில் அவர் இது போல் பேசி இருக்கிறார். இது சரிதானா? நம்ம வீட்டு பொண்ணுங்க இதுபோல் மேடையில் நின்னு கிஸ் கொடுத்தாலோ மச்சான்கள் என்றாலோ ரசிப்போமா... மக்கள் மனசு மாறிப் போச்சு," என்று சேரன் பொறிந்து தள்ளினார்.


சரி, மேட்டருக்கு வருவோம். எனக்கு கொஞ்சம், கொஞ்சம் தமிழ் தெரியும் என்று கூறும் நமீதாவுக்கு தமிழில் பிடித்த வார்த்தையே அந்த மச்சான்ஸ் தான். சரி வாய் நிறைய மச்சான்ஸ் என்கிறீர்களே, அதற்கு அர்த்தம் தெரியுமா என்று கேட்டால் நட்பு என்கிறார்.


மச்சான்ஸுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பது நமக்கு தெரியாம போச்சே...!
Thanks to OneIndia


ஏய், 'பிராம்ப்டிங்' பண்ணாதே: நயன்

Posted: 27 Feb 2012 01:56 AM PST


ஏய், 'பிராம்ப்டிங்' பண்ணாதே: நயன்

பிரபு தேவாவுடன் திருமணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா அடுத்த ரவுண்டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகியுள்ள இயக்குனர்களும், நடிகர்களும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் துவங்கியுள்ளனர்.


நயன்தாராவுக்கு யாராவது பிராம்ப்ட் செய்தால் சுத்தமாகப் பிடிக்காது. அதாவது வசனத்தை அப்பப்போ எடுத்துக் கொடுத்து உதவுவது பிடிக்காது. எவ்வளவு பெரிய வசனமாக இருந்தாலும் மனப்பாடம் செய்துவிட்டு தான் படப்பிடிப்புக்கு வருவார். இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதன்படி பேசி நடிப்பார். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த நயன் தமிழில் நன்றாகப் பேசுவார்.


பேசினால் மட்டும் போதாது என்று நினைத்த அவர் தற்போது தமிழில் எழுதப், படிக்கவும் கற்றுக் கொண்டுள்ளார். தன்னைப் பற்றி வரும் செய்திகளை இணையதளஙகளில் தேடிப்பிடித்துப் படிக்கிறார். இவர் இப்படி இருக்க ஸ்ரேயா தமிழில் நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆகியும் தமிழில் பேசச் சொன்னால, சாரி ஐ டோன்ட் நோ டாமில் என்கிறார்.


நயன் நம்ம செய்தியையும் படிப்பார் என்று நம்புகிறோம்.
Thanks to One India

எதிரிகளைப் 'போட்டுத் தள்ள' வருகிறார் விஜய்!

Posted: 27 Feb 2012 01:54 AM PST


எதிரிகளைப் 'போட்டுத் தள்ள' வருகிறார் விஜய்!

இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தில் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம்.


ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கிறார். முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், திடீரென்று இந்தப் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விஜயிடம் கேட்டதற்கு, 'படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க. சீக்கிரமே மீண்டும் தொடங்கிடும். பெப்சி பிரச்சனை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்" என்றார்.


தற்போது பெப்சி பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததையடுத்து தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. துப்பாக்கி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்படுகிறது.


இந்த படத்தில் விஜய் என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்பது இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் அவர் திருடர்களை டொப்பு, டொப்புன்னு சுட்டுத் தள்ளும் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.


என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஏற்கனவே தமிழகத்தை ஒரு என்கெளன்டர் பரபரப்புக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் வேறு துப்பாக்கியைத் தூக்குகிறார்...!
Thanks to OneIndia

SunTv Headline News 27-02-2012 | Sun Tv headline News 27-02-12 | Sunnews 27th february 2012

Posted: 27 Feb 2012 01:50 AM PST


SunTv Headline News 27-02-2012 | Sun Tv headline News 27-02-12 | Sunnews 27th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Athipookal 27-02-2012 | Sun Tv Athipookal Serial 27th february 2012

Posted: 27 Feb 2012 01:20 AM PST


Athipookal 27-02-12 | Sun Tv Athipookal Serial 27th february 2012
Source 1

Source 2

This posting includes an audio/video/photo media file: Download Now

Ilavarasi 27-02-2012 | Sun Tv Elavarasi Serial 27th february 2012

Posted: 27 Feb 2012 12:38 AM PST


Ilavarasi 27-02-12 | Sun Tv Elavarasi Serial 27th february 2012




This posting includes an audio/video/photo media file: Download Now

Thiyagam 27-02-2012 | Sun Tv Thiyagam Serial 27th february 2012

Posted: 27 Feb 2012 12:04 AM PST


Thiyagam 27-02-2012 | Sun Tv Thiyagam Serial 27th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Mutharam 27-02-2012 | Sun Tv Muthaaram Serial 27th february 2012

Posted: 27 Feb 2012 12:04 AM PST


Mutharam 27-02-12 | Sun Tv Muthaaram Serial 27th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Vellai Thamarai 27-02-2012 | Sun Tv Serial Vellai Thamarai 27th february 2012

Posted: 27 Feb 2012 12:04 AM PST


Vellai Thamarai 27-02-12 | Sun Tv Serial Vellai Thamarai 27th february 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Uravugal 27-02-2012 | Sun Tv Uravugal Serial 27th february 2012

Posted: 27 Feb 2012 12:02 AM PST


Uravugal 27-02-12 | Sun Tv Uravugal Serial 27th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Kasturi 27-02-2012 | Sun Tv kasthuri Serial 27th february 2012

Posted: 27 Feb 2012 12:01 AM PST


Kasturi 27-02-12 | Sun Tv kasthuri Serial 27th february 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Maruthani 27-02-2012 | Sun tv Marudhaani 27th february 2012

Posted: 26 Feb 2012 10:02 PM PST


Maruthani 27-02-12 | Sun tv Marudhaani 27th february 2012




This posting includes an audio/video/photo media file: Download Now

Nanayam Vikatan 04-03-2012 | Free Nanayam Vikatan PDF This week | Nanayam Vikatan 4th March 2012 ebook

Posted: 26 Feb 2012 08:24 PM PST


Nanayam Vikatan 04-03-2012 | Free Nanayam Vikatan PDF This week | Nanayam Vikatan 4th March 2012 ebook

Download Links



http://adf.ly/5nuop
(When File not Working...pl Comment)

Dinakaran E-paper 27-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 27th february 2012

Posted: 26 Feb 2012 07:42 PM PST


Dinakaran E-paper 27-02-2012 | Free Download Dinakaran PDF today ePaper | Dinakaran 27th february 2012

Download Links



(When file not working...pl comment)

பேதைப் பெண் சசிகலா ‘நிலம் பார்க்க’ நடந்தது தப்பா?

Posted: 26 Feb 2012 07:30 PM PST


பேதைப் பெண் சசிகலா 'நிலம் பார்க்க' நடந்தது தப்பா?

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா என்னதான் "சொத்துக் குவிப்பு விவகாரங்கள்' அனைத்துக்கும் தாமே காரணம் என்று ஒப்புக்கொள்ள முன்வந்தாலும், கோர்ட் விசாரணையில் பல விஷயங்கள் கிடுக்கிப்பிடி போடுகின்றன. நேற்று (சனிக்கிழமை) சசிகலாவிடம் கேட்கப்பட்ட கேள்விகள், சசிகலா குற்றத்தை முழுமையாக ஒப்புக் கொண்டாலும், வழக்கு ஜெயலலிதாவை லேசில் விட்டுவிடாது என்பதை காட்டியது.


நேற்று பெங்களூர் நீதிமன்றத்தில், முன்பு நிலம் வாங்கிய விவகாரம் ஒன்றில் நடந்த சம்பவங்கள் பற்றிய கிடுக்கிப்பிடி கேள்விகள் வந்து விழுந்தன.


குறிப்பிட்ட இந்த நிலம், விரளாபுரம் கிராமத்தில் (திருவள்ளூர் மாவட்டம்) உள்ளது. இந்த நிலம் ஜெயலலிதாவுக்காக வாங்கப்பட்டது என்கிறது குற்றப் பத்திரிகை. சசிகலாவின் பதிலோ, "நிலம் வாங்கியது உண்மை, ஆனால் அது ஜெயலலிதாவுக்காக வாங்கப்பட்டது என்பது பொய்"


சசிகலாவின் பதிலை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாதபடி, சாட்சியங்கள் உள்ளன.


குறிப்பிட்ட நிலம் ரத்னவேலு உள்ளிட்ட 14 பேருக்குச் சொந்தமாக இருந்தது. நிலத்தை பார்வையிட சசிகலா அங்கு சென்றதற்கு சாட்சிகள் உள்ளன. சுதாகரன் (முன்னாள் வளர்ப்பு மகன்)  மற்றும முத்தையாவை அழைத்துக் கொண்டு விரளாபுரம் சென்றிருக்கிறார் சசிகலா. ரத்னவேலுவையும் சந்தித்து பேசியிருக்கிறார். அதன்பின் ஜவகர்பாபு இது தொடர்பாக பேசுவதற்கு ரத்னவேலுவை சந்திக்க அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.


நிலம் வாங்கப்படுவது ஜெயலலிதாவுக்காகதான் என்பதை ஜவகர்பாபு, ரத்னவேலுவிடம் கூறியிருக்கிறார். இவ்வளவும், பிராசிகியூஷன் தரப்பில் சாட்சியங்களுடன் எஸ்டாபிளிஷ் பண்ணப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய நபர்களில், சசிகலா, ஜெயலலிதா, சுதாகரன் தவிர்ந்த மற்றைய அனைவரும், "நடந்தது அப்படித்தான்" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.


இந்த விஷயத்தை கூறிய நீதிபதி, "இதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என்று சசிகலாவை கேட்டார்.


சசிகலா, விரளாபுரத்தில் நிலம் வாங்க பத்திரம் பதிவு செய்தது உண்மை. ஆனால், ஜவாகர்பாபு, முத்தையா எல்லோரும் பொய்சாட்சி சொல்லியிருக்கிறார்கள். இதில் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமே கிடையாது. அப்படியிருக்கையில், ஜெயலலிதாவின் பெயரை தேவையில்லாமல் இழுத்து வழங்கு ஜோடிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.


விவகாரம் அத்துடன் முடியவில்லை. பிராசிகியூஷன் தரப்பில் வேறு ஆதாரங்களையும் வைத்திருக்கிறார்கள்.


நிலம் வாங்குவதற்கான பணம், ஜெயலலிதாவின் இல்லமான 36, போயஸ் தோட்டம் என்ற முகவரியில் இருந்துதான் எடுத்துச் செல்லப்பட்டது. அந்தப் பணம்தான், நிலத்தின் உரிமையளர்களாக இருந்த 14 பேருக்கும் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன் பின்னரே நிலம் பதிவு செய்யப்பட்டது. இவை அனைத்துக்கும் ஆதாரங்கள் உள்ளன.


இவற்றையெல்லாம் முழுமையாக விபரித்த நீதிபதி, சசிகலாவிடம், "இந்த விபரங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார்.


சசிகலா மெல்லிய குரலில், "சாட்சிகள் அனைவரும் பொய் சொல்கிறார்கள்" என்று மட்டும் பதில் சொன்னார்.


கோர்ட் கேள்வி-பதில் விவகாரத்தில் சசிகலா, பிராசிகியூஷன் தரப்பை ஏமாற்றுகிறாரோ இல்லையே, நீதிபதியை ஏமாற்றத்தான் செய்கிறார். அதுவும், பரீட்சையில் எக்ஸாமினரை பிட் அடித்து ஏமாற்றுவதுபோல ஏமாற்றியதை யாரும் கண்டுகொள்ளவில்லை.


அந்த விவகாரம் என்னவென்றால், முதல்நாள் விசாரணையின்போது நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்த சசிகலா, தனது வக்கீல் எழுதிக் கொடுத்த பதில்களை டி.வி.-யில் நியூஸ் படிப்பதுபோல வாசித்தார். இதனால் கோபமுற்ற நீதிபதி, கேள்விகளுக்கான பதில்களை வழக்குரைஞர்களின் உதவியோடு முன்கூட்டியே தயாரித்துக் கொண்டு வந்து படிக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியிருந்தார்.


இதனால், நேற்று சசிகலாவால் செய்தியறிக்கை வாசிக்க முடியவில்லை.


ஆனால், அதை அப்படியே விட்டுவிட முடியுமா? கேள்விகளை குறிப்பு எடுத்துக் கொள்வதற்காக என்று கூறி ஒரு நோட்புக்கை தன்னுடன் கொண்டுவந்த சசிகலா, நோட்புக்கின் இடைப் பக்கங்களில் பதில்களுக்கான குறிப்புகளை ஸ்மகிள் பண்ணிக் கொண்டு வந்துவிட்டார். நீதிபதியின் கேள்விகளுக்கு, நைசாக நோட்புக்கிள் உள் பக்கங்களை தட்டிப் பார்த்து, அதிலிருந்து பதில்களை கூறியதை பார்க்கக் கூடியதாக இருந்தது.


தமிழக அரசியலையே ஆட்டிவைத்த ஒருவருக்கு இந்த சின்ன ட்ரிக்கூட தெரிந்திருக்காதா?


-பெங்களூருவிலிருந்து ஷீமா தத்தின் குறிப்புகளுடன், ரிஷி.
Thanks to ViriVirupu

Kumudam Jothidam 02-03-2012 | Free Kumudam Jothidam PDF This week | Kumudam Jothidam 2nd March 2012 ebook

Posted: 26 Feb 2012 12:25 PM PST


Kumudam Jothidam 02-03-2012 | Free Kumudam Jothidam PDF This week | Kumudam Jothidam 2nd March 2012 ebook

Download Links ( 3 )




(When file not working...pl comment)

Dinamalar E-paper 27-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 27th february 2012

Posted: 26 Feb 2012 12:12 PM PST


Dinamalar E-paper 27-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 27th february 2012


Download Link 1
http://adf.ly/5nNFz


Download Link 2
http://adf.ly/5nNIR


(When File not working..pl comment)

Puthiya Thalaimurai 23-02-2012 | Free Download Puthiyathalaimurai magazine ebook 23rd February 2012

Posted: 26 Feb 2012 12:10 PM PST


Puthiya Thalaimurai 23-02-2012 | Free Download Puthiyathalaimurai magazine ebook 23rd February 2012

Download link


(When file not Working...pl comment)

தம்பதிகளுக்குள் சண்டை-மாமியார்களும் முக்கியக் காரணமாம்!

Posted: 26 Feb 2012 11:43 AM PST


தம்பதிகளுக்குள் சண்டை-மாமியார்களும் முக்கியக் காரணமாம்!

தம்பதிகளுக்குள் ஏற்படும் சண்டைகளுக்கான காரணிகளில் மாமியார்களும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார்களாம்.


பணப் பிரச்சினை, குடும்பப் பிரச்சினை, வேலை தொடர்பான பிரச்சினை என பல பிரச்சினைகளை மையமாக் வைத்து கணவன், மனைவி இடையே சண்டை மூண்டாலும் கூட மாமியார் பிரச்சினையும் முக்கியமானதாக இருக்கிறதாம்.


இந்தக் கதை இங்கிலாந்துக் கதை. அந்த நாட்டில் குடும்பச் சண்டைகள் பலவற்றுக்கு மாமியார் -மருமகள் மோதலே காரணம் என்கிறது ஒரு ஆய்வு.


2000 தம்பதிகளிடம் இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தினர். அதில் சம்பளப் பிரச்சினை, பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகள் சண்டைகளுக்குக் காரணமாக இருந்தாலும் மாமியார் பிரச்சினையும் முதன்மையானதாக இருக்கிறதாம்.


பிலிப்ஸ் நிறுவனம்தான் இந்த சர்வேயை நடத்தியுள்ளது. தங்களுக்கு வீட்டில் ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால் எப்போதும் பதட்டமாகவும், கோபத்தோடும் இருக்க நேரிடுவதாக பல பெண்கள் கருத்து தெரிவித்தனராம்.


குடும்பப் பெண்களுக்கு ஏற்படும் பத்து முக்கியப் பிரச்சினைகளாக குடிப் பழக்கம், துணி துவைப்பது, டிவியில் என்ன பார்ப்பது என்பதில் வரும் சண்டை ஆகியவை முக்கிய இங்களைப் பிடித்துள்ளன.


சில வீடுகளில் தம்பதிகளுக்கிடையே தினசரி சண்டை மூளுகிறதாம். 20ல் ஒரு ஜோடி, தினசரி பலமுறை சண்டை போடும் ஜோடிகளாக உள்ளனராம்.


சினனச் சின்ன பிரச்சினையைக் கூட பல வீடுகளில் பெரிதாக்கி பெரும் சண்டை போடுகிறாராக்ளாம். டிவி ரிமோட்டை கையில் வைத்திருப்பது தொடர்பாக பலரது வீடுகளில் போர் வெடிக்கிறதாம். தலையைத் துவட்டி விட்டு துணியை ஆங்காங்கே போடுவது தொடர்பாக சண்டை போடுகிறார்களாம். வெளியில் கிளம்புவதற்கு டைம் ஆனால் கூட சில ஜோடிகள் பெரும் சண்டையில் இறங்கி விடுகிறார்களாம்.


நம்ம ஊரில் மாமியார்களும், மருமகள்களும் சண்டைகளை மூட்டை கட்டி விட்டு ஜாலியாக வாழ ஆரம்பித்து விட்டனர். இங்கிலாந்தில் இப்போதுதான் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார்கள் போல..!
Thanks to OneIndia

கொலவெறி புகழ் 3 படத்தை ஏலத்தில் விட கஸ்தூரி ராஜா முடிவு

Posted: 26 Feb 2012 11:19 AM PST



கொலவெறி புகழ் 3 படத்தை ஏலத்தில் விட கஸ்தூரி ராஜா முடிவு

கொலவெறி டி பாடல் புகழ் 3 படத்தை ஏலத்தில் விற்க படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா முடிவு செய்துள்ளார்.


3 படம் மூலம் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இயக்குனராகியிருக்கிறார். இந்த படத்தில் தனது கணவனை நாயகனாகவும், தோழி ஸ்ருதி ஹாசனை நாயகியாகவும் நடிக்க வைத்திருக்கிறார். படத்தை தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரித்திருக்கிறார். படத்திற்கு புதுமுகம் அனிருத் இசையமைத்திருக்கிறார்.


இதில் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி டி பாடல் இந்தியா மட்டும் இன்றி உலகப் புகழ் பெற்றுள்ளது. இந்த பாட்டைக் கேட்ட பிரதமர் மன்மோகன் சிங் தனுஷ், ஸ்ருதியை அழைத்து விருந்து கொடுத்தார். இதனால் படத்தின் புகழ் மேலும் பரவியது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை ரூ.50 கோடிக்கு வாங்க வினியோகஸ்தர்கள் தயாராக உள்ளனர்.


தனுஷின் திருடா திருடி படத்தின் `என்.எஸ்.சி.' வினியோக உரிமையை ஏலத்தில் விட்டது போன்று 3 படத்தையும் ஏலத்தில் விட கஸ்தூரி ராஜா முடிவு செய்துள்ளார்.
Thanks to OneIndia


அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனாலதான் சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்யலே-வடிவேலு

Posted: 26 Feb 2012 11:18 AM PST


அம்மாவுக்கு உடம்பு சரியில்லை, அதனாலதான் சங்கரன்கோவிலில் பிரசாரம் செய்யலே-வடிவேலு

மதுரை: எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிச்சு சிகிச்சை பண்ணிடிருக்கோம். அதனால்தான் என்னால சங்கரன்கோவில்ல பிரசாரம் பண்ண முடியவில்லை. மத்தபடி, நான் யாருக்கும் பயந்து ஒளிந்து ஓடவில்லை, ஓடவும் மாட்டேன். காலமும், நேரமும் வருகிறபோது மக்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார் வைகைப் புயல் வடிவேலு.


விஜயகாந்த்துடன் கடும் மோதலில் இருந்து வந்த வடிவேலு, கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவில் இணைந்து விஜயகாந்த்தை மிகக் கடுமையாக விமர்சித்துப் பிரசாரம் செய்தார். ஆனால் அவரது நேரமோ, என்னவோ, தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்தது, அதிமுகவுடன் சேர்ந்த தயவால், எதிர்க்கட்சியாக உயர்ந்தது தேமுதிக, விஜயகாந்த்தோ எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார்.


இதனால் வடிவேலு நிலைமை சிக்கலாகிப் போனது. அவரை வைத்துப் படம் பண்ண யாரும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வடிவேலுவின் நகைச்சுவையை மக்கள் ரசிக்கும் வாய்ப்பை திரையுலகம் மறுத்து வருகிறது. வடிவேலு இல்லாத தமிழ் சினிமா, புளியே இல்லாத புளிச்சாதம் போல இருக்கிறது.


இந்த நிலையில், வடிவேலு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், வடிவேலுவுக்கு அரசியல் எல்லாம் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். ஓட்டுப்போடும் அத்தனை பேரும் அரசியல்வாதிகள்தான். ஓட்டுப்போடும் மக்களில் நானும் ஒருவன் என்பதால் நானும் அரசியல்வாதிதான்.


என் தாய் சரோஜினி, உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ஐராவத நல்லூரில் மருத்துவமனையில் உள்ளார். அதனால் என்னால் சங்கரன்கோவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடமுடியவில்லை.


தேர்தலில் போட் டியிடுவீர்களா என்று என்னை கேட்கிறார்கள். காலமும், சூழ்நிலையும் நிர்ப்பந்நதிக்கும் போது மக்களை சந்திப்பேன். நான் யாருக்கும் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளமாட்டேன்.


தீவிர அரசியலில் குதிப்பேன். அரசியலுக்கு நான் வரக்கூடாது என்று சொல்வது அபத்தம். நிச்சயமாக அரசியலுக்கு வந்தே தீருவேன். என்னை யாரும் தடுக்க முடியாது.


திரையுலகம் என்னை ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டதாக சொல்கிறார்கள். விரைவில் நான் கதாநாயகனாக நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வெளிவரும் என்றார் வடிவேலு.
Thanks to OneIndia

பெண்களை 'செக்ஸி'யாக இருக்கிறீர்கள் என்று சொல்வதில் தவறில்லை-தேசிய மகளிர் ஆணையர் தலைவி பேச்சு

Posted: 26 Feb 2012 11:16 AM PST


பெண்களை 'செக்ஸி'யாக இருக்கிறீர்கள் என்று சொல்வதில் தவறில்லை-தேசிய மகளிர் ஆணையர் தலைவி பேச்சு

ஜெய்ப்பூர்: பெண்களைப் பார்த்து செக்ஸியாக இருக்கிறீர்கள் என்று சொல்வை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அது தவறான ஒன்றும் கிடையாது என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவி மம்தா சர்மா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சர்மா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 


யாராவது பெண்களைப் பார்த்து செக்ஸியாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அது தவறான வார்த்தை கிடையாது. அதை பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அழகாக இருப்பதைத்தானே செக்ஸி என்கிறார்கள். எனவே அதில் தவறு ஒன்றும் கிடையாது என்று கூறியபோது கூட்டததில் இருந்த அத்தனை பேரும் ஸ்தம்பித்துப் போய் விட்டனர்.


மம்தா சர்மாவின் இந்தப் பேச்சுக்கு பல மகளிர் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் கூட்டத்திற்கு வந்த ஒரு மகளிர் அமைப்பின் தலைவியும் கூட கடும் கண்டனம் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் துரதுரஷ்டவசமானது. பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சி தருகிறு. இந்தக் கூட்டத்திற்கு வந்த அத்தனை பேருமே தற்போது மமதா பேசியது குறித்த விவாதத்தில் இறங்கி விட்டனர். மற்றவர்கள் பேசிய நல்ல உரைகளைக் கூட யாரும் சரிவரக் கவனிக்கவில்லை. இது வருத்தம் தருகிறது என்றார்.


மமதாவின் பேச்சுக்கு பியூசிஎல் பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீவத்சவா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மமதா கூறுவதைப் பார்த்தால் பெண்களைப் போகப் பொருளாக அவர் கருதுவது போலத் தெரிகிறது. எனவே உடனடியாக அவரை தேசிய மகளிர் ஆணையத் தலைவி பொறுப்பிலிருந்து மத்திய அரசு நீக்க வேண்டும். அந்தப் பொறுப்புக்கு அவர் லாயக்கற்றவர் என்றார்.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் தேசிய மகளிர் ஆணையத் தலைவியாக நியமிக்கப்பட்டார் மமதா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவி இவர். இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டபோதே பெரும் சர்ச்சை கிளம்பியது. பிரதமர் அலுவலகத்திற்குப் புகார்களும் பறந்தன.


ராஜஸ்தான் மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராக 6 வருட காலம் இருந்தவர் மமதா. பின்னர் கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர்தான் அவர் தேசிய மகளிர் ஆணையத் தலைவியானார். இப்போது தனது 'செக்ஸி' பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Thanks to OneIndia

சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் மாற்றப்படுவாரா?

Posted: 26 Feb 2012 11:15 AM PST


சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் மாற்றப்படுவாரா?

சென்னை: சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் மீது நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதால், அவர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சங்கரன்கோவில் நகராட்சி திமுக கவுன்சிலராக உள்ள சங்கர் புதிய வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது.


காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலத்தின் தம்பி மகன்தான் ஜவஹர் சூரியக்குமார். இவருக்குத்தான் தற்போது திமுக சார்பில் போட்டியிட கட்சி மேலிடம் சீட் கொடுத்துள்ளது. ஆனால் ஜவஹர் சூரியக்குமார் மீதான ஒரு விவகாரம் தற்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.


ஜவஹர் சூரியக்குமார் மீது நெல்லை கோர்ட்டில் ஒரு கிரிமினல் மோசடி வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. அருணாச்சலத்திற்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலம், செங்கோட்டை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், செங்கோட்டைக்கும், கட்டளைக்குடியிருப்புக்கும் இடையே இருக்கிறது.


அருணாச்சலம் மறைவுக்குப் பின்னர் இந்த நிலத்தை தனக்கு அருணாச்சலம் உயில் எழுதி வைத்துள்ளதாக கூறி தனது பெயரில் மாற்றிப் பதிவு செய்து விட்டாராம் ஜவஹர் சூரியக்குமார். இதையடுத்து அருணாச்சலம் குடும்பத்தினர் போலீஸில் புகார் செய்தனர். ஆனால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையை அணுகினர். அங்கிருந்து உத்தரவு கிடைத்தவுடன் ஜவஹர் சூரியக்குமார் மீது 2001ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது நெல்லையில் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது வழக்கு.


இந்த விவகாரத்தை திமுக மேலிடத்திற்கு ஜவஹர் சூரியக்குமார் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவரை மாற்றும் முடிவுக்கு திமுக மேலிடம் வந்துள்ளதாக தெரிகிறது.


அவருக்குப் பதில் நகராட்சி திமுக கவுன்சிலர் சங்கருக்கு சீட் தரப்படும் என்றும் பேச்சு அடிபடுகிறது.


யார் இந்த சங்கர்?


இதற்கிடையே இந்த சங்கர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் வேறு யாருமல்ல, திமுக ராஜ்யசபா எம்.பி. தங்கவேலுவின் மருமகனாம். அதாவது சகோதரி மகன். தங்கவேலு முன்னாள் மாநில அமைச்சரும் ஆவார். தங்கவேலு அழகிரியின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.


நாளை இருவரும் மனு தாக்கல்


இந்தநிலையில் நாளை திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜவஹர் சூரியக்குமாரும், வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படும் சங்கரும் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.


சங்கர் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்வாரா அல்லது அதிகாரப்பூர்வ வேட்பாளராக மனு தாக்கல் செய்வாரா என்பது தெரியவில்லை.


திமுகவில் பரபரப்பு


இந்தப் புதிய சூழ்நிலையில் சங்கரன்கோவில் திமுக வட்டாரம் பெரும் பரபரப்படைந்துள்ளது.
Thanks to OneIndia

Bairavi 26-02-2012 | Sun Tv Bairavi Thiriller Serial 26th February 2012

Posted: 26 Feb 2012 11:05 AM PST


Bairavi 26-02-2012 | Sun Tv Bairavi Thiriller Serial 26th February 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Nenjam Marappathillai 26-02-2012 | Kalaignar tv Nenjam Marappathillai 26th February 2012

Posted: 26 Feb 2012 10:24 AM PST


Nenjam Marappathillai 26-02-2012 | Kalaignar tv Nenjam Marappathillai 26th February 2012


This posting includes an audio/video/photo media file: Download Now