TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


3 படத்தில் ரஜினி? - தனுஷ் குடும்பத்தின் பலே டெக்னிக்!!

Posted: 25 Feb 2012 01:29 AM PST


3 படத்தில் ரஜினி? - தனுஷ் குடும்பத்தின் பலே டெக்னிக்!!

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரும் படத்து வைக்கப்பட்டு '3' என்ற தலைப்புக்கு அர்த்தம் என்ன என்ற 'ஆராய்ச்சி' ஆரம்பமாகிவிட்டது.


கொலைவெறி என்ற பாடல் மூலம் உலகம் முழுக்க பேசப்படும் படமாகிவிட்ட, 3-ல் தனுஷ் - ஸ்ருதி ஜோடியாக நடித்துள்ளனர்.


படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி தோன்றுவார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பின்னர் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யாவே அதை மறுத்திருந்தார்.


இப்போது படம் முடிந்து வெளியீட்டு உரிமை பேரங்கள் நடக்கும் நிலையில் மீண்டும் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்ற செய்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன.


இந்த முறை செய்தியை யாரும் மறுக்கவில்லை. மாறாக படத்தின் தயாரிப்பாளரான கஸ்தூரி ராஜா, படத்தில் இடம்பெற்றுள்ள 3வது முக்கிய நடிகர் குறித்து எதுவும் சொல்ல மாட்டோம். அது சஸ்பென்ஸ் என்று கூறியுள்ளார்.


நல்ல பிஸினெஸ் டெக்னிக் சாரே... ரஜினியே உங்ககிட்ட ட்யூஷன் கத்துக்கணும் போங்க!
Thanks to OneIndia

பிஎஸ்என்எல்-வைமேக்ஸ் ஒப்பந்த ஊழல்: சென்னை உள்பட 4 நகர்களில் சிபிஐ ரெய்ட்; ராசாவுக்கு புது சிக்கல்

Posted: 25 Feb 2012 01:25 AM PST


பிஎஸ்என்எல்-வைமேக்ஸ் ஒப்பந்த ஊழல்: சென்னை உள்பட 4 நகர்களில் சிபிஐ ரெய்ட்; ராசாவுக்கு புது சிக்கல்

சென்னை & டெல்லி: ஆ.ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வைமேக்ஸ் சேவைக்காக ஸ்டார் நெட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது.


இது தொடர்பாக ஆதாரங்களைத் திரட்ட இன்று சென்னை, டெல்லி, கொல்கத்தா, குர்காவ்ன் ஆகிய நகர்களில் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர்.


பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வைமேக்ஸ் சேவையை பொது மக்களுக்கு வழங்க சில தனியார் நிறுவனங்களுக்கும் franchise அனுமதி அளிக்கப்பட்டது. இந்த அனுமதியைப் பெற்ற முக்கிய நிறுவனம் ஸ்டார் நெட் கம்யூனிகேசன்ஸ் ஆகும்.


இந்த franchise அனுமதி பெற வேண்டுமானால் அந்த நிறுவனத்தின் வருடாந்திர வரவு-செலவு ரூ. 100 கோடிக்கும் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் நெட் நிறுவனத்தின் பண பலம் அதைவிடக் குறைவாகவே இருந்துள்ளது. ஆனாலும், தங்களது வரவு-செலவு கணக்குகளைத் திருத்தி, ரூ. 100 கோடிக்கும் அதிகமாக பிஸினஸ் நடப்பது போல காட்டி விண்ணப்பித்துள்ளது ஸ்டார் நெட்.


இதை ஏற்றுக் கொண்டு அந்த நிறுவனத்துக்கு நாட்டின் மிக முக்கியமான 6 மண்டலங்களில் வைமேக்ஸ் சேவை வழங்க அனுமதி வழங்கினார் அப்போதைய அமைச்சர் ராசா. இந்த நிறுவனம் ராசாவுக்கு மிக நெருக்கமானது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
  Read:  In English 
இந் நிலையில் இந்த விஷயத்தை இத்தனை நாட்களாக ஆறப் போட்டு வந்த சிபிஐ திடீரென வேகம் காட்டியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ இன்று சென்னை, டெல்லி, கொல்கத்தா, குர்காவ்ன் ஆகிய நகர்களில் 9 இடங்களில் சோதனையும் நடத்தியுள்ளது.


மேலும் இந்த ஒப்பந்தத்தை செய்ததில் முக்கிய பங்கு வகித்த 4 பிஎஸ்என்எல் அதிகாரிகளிடமும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.


இந்த வழக்கில் ராசா குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை என்றாலும், அவரது நிர்பந்தத்தால் தான் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிய வந்தால், அவருக்கு மேலும் சிக்கல்கள் உருவாகலாம் என்று தெரிகிறது.
Thanks to OneIndia

Yugiyudan Yugiyungal 24-02-2012 | Jaya tv Yugi yudan Yugiyungal 24th February 2012

Posted: 25 Feb 2012 01:08 AM PST


 Yugiyudan Yugiyungal 24-02-2012 | Jaya tv Yugi yudan Yugiyungal 24th February 2012


கண்டபடி சாப்பிட்டா எடை கட்டுக்குள் வராது!!

Posted: 24 Feb 2012 10:59 PM PST


கண்டபடி சாப்பிட்டா எடை கட்டுக்குள் வராது!!

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று டயட்டில் இருப்பவர்கள் வீட்டில் அதற்கேற்ப உணவுகள் உட்கொள்கின்றனர். அதேசமயம் விருந்து, விழாக்களுக்கு செல்லும் அவர்கள் அங்குள்ள உணவுகள், ஐஸ்கிரீம், சாக்லேட் என ஒரு பிடி பிடிக்கின்றனர். இதனால் உடல் எடை கட்டுக்குள் வராமல் போகிறது. உண்மையிலேயே உடல் எடை குறைக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் வாயைக் கட்டுப்படுத்தினாலே எடை தானாக குறையும் என்று கூறியுள்ளனர். அவர்களின் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.

கொழுப்பு உணவுகள்

உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத் தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல் நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும். முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத் தொடங்கியிருப்பதை நீங்களே உணர்வீர்கள்!. கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் முன் உங்கள் எடையையும் உடலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்கவும்.

தியானத்தால் திசை திருப்பலாம்

தீனி உண்ணும் எண்ணம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே அந்த பத்து நிமிடங்கள் உங்கள் மனத்தை பாட்டு கேட்பதன்மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ அல்லது தியானம் மூலமோ திசை திருப்பலாம். எப்போதும் வாய் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் மவுத்வாஷ் உபயோகிக்கலாம். வாய் - சுத்தமாக இருக்கும்போது, கண்டதை உண்ணும் எண்ணம் தோன்றாது.

உடல் தளர்ச்சியின்போது உண்ணும் எண்ணம் தோன்றலாம். அச் சமயங்களில் கதவை அடைத்து, கண்களை மூடி ரிலாக்ஸ் செய்யுங்கள். குறிப்பாக சமையலறை பக்கம் போகாமல் ஏதாவது வேலைகளில் ஈடுபடலாம்!.

மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். மன இறுக்கம்கூட அதிகப்படியான உணவு உண்பதற்கு ஒரு காரணம். மன அழுத்தம்கூட உடல் எடை கூட காரணமாகலாம். உடற்பயிற்சியின்போது சுரக்கும் எண்டோர்ஃபின் என்னும் ஹார்மோன் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றது. மேலும் டிரிப்போஃபேன் என்னும் அமினோ அமிலம் நிறைந்த சோயா மற்றும் பால் பொருட்களும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியின் அவசியத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. உடலின் ஆரோக்கியத்திற்கும், இளமைக்கும் உடற்பயிற்சி தேவையான ஒன்று. இதற்கென தனியே நேரம் செலவிட இயலாவிடினும் வீட்டுவேலை, படியேறுதல் மற்றும் தோட்டக்கலை போன்றவற்றில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதே, சிறந்த உடற்பயிற்சியாகும். இவை உடலின் எண்ணற்ற கலோரிகளை குறைக்கின்றன.

எண்ணத்தை மாற்றுங்கள்

உலர் பருப்புகள் உடலுக்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணம் உண்டு. தினமும் சிறிதளவு உலர் பருப்புகள் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும் என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. எனவே தினசரி 25 கிராம் நட்ஸ் (பாதாம், நிலக்கடலை, வால்நட் மற்றும்) இரண்டு தம்ளர் தண்ணீர் சாப்பிடலாம். இருபது நிமிடங்களில் தீனி உண்ணும் உங்கள் எண்ணத்தை மாற்றிவிடும். பசிக்கும் போதெல்லாம், பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சலாட் செய்து சாப்பிட்டு, ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும்.

விருந்து உணவுகள்

திருமணம், பிறந்தநாள் போன்ற விருந்துகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஒரு வேளை, மிக அவசியமான விருந்து நிகழ்ச்சி என்றால், காய்கறி, கீரை சூப் என பாதி வயிறு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். இதனால் ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ் என கண்டபடி சாப்பிடத் தோன்றாது. எனவே மனதளவில் உணவுகளை கட்டுப்படுத்தினாலே உடல் எடை தானாக குறையும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Posted: 24 Feb 2012 10:57 PM PST


பெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

பெங்களூர்: பிரபல சினிமா தயாரிப்பாளரும் தொழிலதிபருமான அசோக் கெனியை நேற்று சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கெனி தயாரித்துள்ள புதிய படமான பிரசாத் வெற்றி பெற வாழ்த்துக் கூறினார் ரஜினி. 


உடல் நலம் பெற்ற பிறகு தனது நெருங்கிய நண்பர்களைத் தேடிச் சென்று சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.


அதன் படி நேற்று வெள்ளிக்கிழமை பெங்களூர் சென்ற ரஜினி, தயாரிப்பாளரும் தொழிலதிபருமான தனது நண்பர் அசோக் கெனியைச் சந்தித்தார்.


அசோக் கெனியின் ஏகேகே எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள 'பிரசாத்' படம் (ஹீரோ அர்ஜுன்) பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது.


இதைப் பாராட்டும் விதமாக அவருக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார் ரஜினி. ரஜினியை நலம் விசாரித்தார் அசோக் கெனி. இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
Thanks to OneIndia

இந்திய பிளவு ஏற்பட்டதாக வெளியான செய்தியை கூறி சிரித்து கொண்டோம் - கேப்டன் டோணி

Posted: 24 Feb 2012 10:54 PM PST


இந்திய பிளவு ஏற்பட்டதாக வெளியான செய்தியை கூறி சிரித்து கொண்டோம் - கேப்டன் டோணி

டெல்லி: இந்திய அணியில் பிளவு எதுவும் ஏற்படவில்லை. அது குறித்த செய்தியை வீரர்கள் இடையே கூறி சிரித்து கொண்டோம் என்று இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளனர். இந்திய அணியில் பிளவு எதுவும் இல்லை என்று அணியின் ஊடகங்கள் மேலாளர் வாலியாவும் தெரிவித்துள்ளார்.


இந்திய அணியி்ல மூத்தவீரர்கள் இடையே சுழற்சி முறையில் வாய்ப்பு அளிப்பது தொடர்பாக சர்ச்சையில், கேப்டன் டோணி, துணை கேப்டன் ஷேவாக் இடையே செய்தியாளர்கள் சந்திப்பின் போது சொல் போர் ஏற்பட்டது. இதில் இருவரும் மாறிமாறி குற்றம் சாட்டி கொண்டனர்.


இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் டோணி, இந்திய அணிக்குள் எந்த பிளவும் இல்லை. வீரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக உள்ளேம் என்று தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது,


இந்தியா அணியின் உடைமாற்று அறையில் வீரர்கள் இடையே பிளவு ஏற்பட்டதாக வெளியான செய்தியை கூறி சிரித்து கொண்டோம். இந்திய வீரர்களுக்குள் எந்த பிளவும் இல்லை. முத்தரப்பு போட்டியில் அடுத்து வரும் 2 லீக் போட்டிகளில் வெற்றிப் பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதில் முழு கவனம் செலுத்தி வருகின்றோம் என்றார்.


இதேபோல இந்திய ஊடகங்கள் மேலாளர் ஜி.எஸ்.வாலியா கூறியதாவது,


இந்திய அணியில் எந்த பிளவும் இல்லை. இது போன்ற செய்திகள் ஏன் வெளியாகின்றன என்று தெரியவில்லை. தற்போது நடந்ததை மறப்போம், வருங்காலத்தில் வரும் நல்லதை எதிர் நோக்குவோம்.


இந்தியாவில் உள்ள பிசிசிஐ தலைவரின் யுகத்தை பொறுத்து, நடந்த சம்பவங்களுக்கு ஊடகங்களை குற்றம் சாட்டினார். ஆனால் நான் அதுபோல குற்றம் சாட்டவில்லை. வீரர்களுக்கு தொடர்பில் இடைவெளி அதிகரித்ததால், இது போன்ற சர்ச்சைகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.


இந்திய வீரர்களுடன் கடந்த 75 நாட்களாக தங்கி உள்ளேன். பிளவு சர்ச்சை எழுந்த பிறகு வீரர்கள் இடையே எந்த சிறப்பு கூட்டமும் நடத்தவில்லை. ஒவ்வொரு போட்டியின் இறுதியி்லும் பத்திரிக்கையாளர் சந்திப்பும், வீரர்கள் கூட்டமும் மட்டுமே நடைபெற்றது என்றார்.
Thanks to OneIndia

'குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்?' - உதயகுமார் சவால்

Posted: 24 Feb 2012 10:53 PM PST


'குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் பதவி விலகுவாரா மன்மோகன் சிங்?' - உதயகுமார் சவால்

சென்னை: தங்கள் போராட்டங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், வழக்குத் தொடருவேன். பதவியில் இருந்து விலகத் தயாரா, என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சவால் விடுத்துள்ளார். 


கூடங்குளம் அணு மின் திட்டம் செயல்படுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் போராட்டங்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா மற்றும் ஸ்காண்டினோவிய நாடுகளைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்த பேட்டி, 'சயின்ஸ்' இதழில் வெளியாகியுள்ளது.


இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து கூடங்குளம் போராட்டத்தின் ஒருங்ணைப்பாளர் உதயக்குமார் இன்று நிருபர்களிடம் கூறுகையில், "இந்திய ஜனநாயக நாட்டில் கடந்த 7 மாதங்களாக லட்சக்கணக்கான மக்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக அகிம்சை முறையில் போராடி வருகின்றனர். ஆனால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் இதுவரை போராடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. இது, உண்மையில் வெட்கக்கேடான செயல். 


போராட்டிவரும் மக்களின் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அமெரிக்கா, ஸ்காண்டினோவிய நாடுகளைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவதாகக் குற்றம்சாட்டி, இந்தப் போராட்டத்தை அவர் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 


பிரதமரின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுக்கிறோம். எங்களுக்கு சர்வதேச நாடுகள் அல்லது இந்தியாவைச் சேர்ந்த எந்த என்.ஜி.ஓ.க்களும் பணம் தரவில்லை. இதை பலமுறைச் சொல்லியிருக்கிறோம். 


இதே குற்றச்சாட்டைதான் பிரதமரின் அமைச்சரவையில் உள்ள நாராயணசாமி கூறிவந்தார். அதையே இப்போது பிரதமரும் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த பொறுப்பு மிக்க பிரதமர், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் ஏதாவது சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கலாமே!


மதிப்புமிக்க பதவியில் உள்ள மன்மோகன் சிங், இந்திய மக்களை அவமதித்துள்ளார். மக்கள் தங்களது பிரச்னைகளுக்காக களமிறங்கி போராட மாட்டார்கள் என்று அவர் நினைக்கிறாரா? கொள்கை ரீதியில் முடிவெடுத்து போராடுவதற்கு மக்களுக்கு சொந்த புத்தி இல்லை என்று அவர் நினைக்கிறாரா? அல்லது மக்கள் அனைவரையும் காங்கிரஸார் போலவே இருக்க வேண்டும் விரும்புகிறாரா? 


பிரதமர் தனது குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும். அவர் தனது குற்றச்சாட்டை நிரூபித்தால், போராட்டக் குழுவில் உள்ளவர்கள் எவ்வித விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றால், பிரதமர் தனது பதவியில் இருந்து மட்டுமல்ல; அரசியலில் இருந்தே விலக வேண்டும். அவர் செய்யத் தயாராக இருக்கிறாரா? 


இவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அல்ல; 'தெரிவு' செய்யப்பட்ட பிரதமர். எனவேதான், அவர் இந்திய மக்களை இழிவுபடுத்துகிறார். 


இந்தப் போராட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் பெறுகிறோம் என்று நீங்கள் சொன்னால், சில்லறை வணிகம் போன்றவற்றில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதற்கு, நீங்கள் வெளிநாட்டில் இருந்து எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்? 


நாங்கள் காங்கிரஸார் அல்ல; இந்திய மக்கள். எங்களுக்கு சுய மரியாதை உண்டு. நாட்டுப் பற்று உணடு. சுயநலத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் நாங்கள் போராடவில்லை. எங்கள் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக போராடுகிறோமே தவிர, பதவிகளுக்காகவும் அதிகாரத்துக்காவும் போராடவில்லை. 


எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது. கண்டிப்பாக அவர்களால் நிரூபிக்க முடியாது. வெளிநாடுகளில் இருந்தோ அல்லது இந்தியாவில் உள்ள என்.ஜி.ஓ.க்களில் இருந்தோ எவரிடம் நாங்கள் பணம் வாங்கவில்லை," என்றார் உதயகுமார். 


தமிழக நிபுணர் குழுவின் ஒரு சார்பான அறிக்கை


தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு குறித்து கேட்டதற்கு, "இனியன் குழு ஒரு ஜோக் என்பதை அவர்களின் செயல்பாடுகள் தெளிவுபடுத்தியிருக்கிறது. கூடங்குளம் அணு மின் நிலையைத்தை பார்வையிட்ட அவர்கள், எங்களிடம் பேசினார்கள்.


ஆனால், எங்கள் கோரிக்கையை ஏற்று, கூடங்குளம் மக்களிடமும், எங்களது நிபுணர் குழுவிடமும் அவர்கள் பேசவில்லை. ஒருசார்புத் தன்மையுடன் தான் அவர்கள் செயல்பட்டார்கள். 


இனியன் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, 'கூடங்குளம் அணு மின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது,' என்று நற்சான்று அளித்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. இதில் இருந்தே அவர்களது அறிக்கையின் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.


தமிழக அரசு நியமித்த குழுவின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். அந்த அறிக்கையின் முடிவுகளில், நாங்கள் எதிர்பார்த்தபடியே ஒருசார்புத் தன்மை காணப்பட்டால், அந்த அறிக்கையின் நகல்களை கூடங்குளத்தில் எரிப்போம்," என்றார்.
Thanks to One India

ராவணன் ‘பங்களா வேட்டைகள்’, மும்மரமாக கோவையில்!

Posted: 24 Feb 2012 10:20 PM PST


ராவணன் 'பங்களா வேட்டைகள்', மும்மரமாக கோவையில்!

ராவணன் போலீஸ் விசாரணையில் என்னதான் பவ்வியமாக பதில் சொன்னாலும், ஆள் அழுத்தக்காரர் என்கிறார்கள் கோவை காவல்துறையினர். ராவணன் சம்பாதித்தது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால், சம்பாதித்த பணம் மாயமான விபரம்தான் யாருக்கும் தெரியவில்லை.


போலீஸ் துருவித்துருவி கண்டுபிடித்த விபரம், கொங்கு மண்டலத்தில் எந்தச் சொத்து முதலீடும் அவர் பெயரிலோ, அவரது குடும்பத்தினரின் பெயரிலோ நேரடியாக இல்லை என்பதுதான்! முதலீடுகள் நிச்சயம் பினாமிகள் பெயரில்தான் இருக்க வேண்டும்.


ஆனால், ராவணனோடு நெருக்கமாக திரிந்த நண்பர் வட்டத்தில் யாருடைய பெயரிலும், இவர்கள் எதிர்பார்க்கும் தொகையில் சொத்து ஏதும் கடந்த 8 மாதத்துக்குள் புதிதாக சேரவில்லை.


இந்த புதையல் வேட்டையில் கோவை போலீஸ் தலையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும் நிலையில், சென்னையில் இருந்து கோவை சென்ற உளவுத்துறை டீம் ஒன்று பக்காவாக இரு ஸ்பாட்களில் விசாரித்து விட்டு சென்றிருக்கிறது.


இதில் பெரிய தமாஷ் என்னவென்றால், சென்னை டீம் வந்து போன பின்னரே, கோவை காவல்துறைக்கு அப்படி யாரோ வந்து போன தகவல் போய்ச் சேர்ந்திருக்கிறது.


சென்னை டீம், சரியான தகவல்களுடனேயே வந்து இறங்கிய சென்னை டீம், நேரே பீளமேடு ஹோப் காலேஜ் அருகே மெயின் ரோடில் இருந்து சற்றே உள்வாங்கியுள்ள பாதி கட்டி முடிக்கப்பட்ட பங்களாவுக்கு சென்றிருக்கின்றனர். அதைச் சுற்றிப் பார்த்து போட்டோக்களும் எடுத்துக் கொண்டு அடுத்து சென்றது கோவை ராமநாதபுரம் ஏரியா.


அங்கேயிருந்த பங்களா ஒன்றையும் பார்த்துவிட்டு கிளம்பிச் சென்றிருக்கின்றனர்.


கோவை வட்டாரங்களில் விசாரித்தபோது, ராமநாதபுரம் வீடு பற்றி கோவை காவல்துறைக்கு ஏற்கனவே தெரியும் என்றார்கள். அந்த வீட்டின் உரிமையாளர் பற்றி அவர்களே விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்களாம்.


இந்த இரு வீடுகளை கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. குறிப்பிட்ட இரு வீடுகளின் 'டாக்குமென்ட்' உரிமையாளர்களின் பெயர்களில் வேறு எங்கெல்லாம் சொத்துக்கள் பதிவாகியுள்ளன என்று துருவிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. (ஒரு உரிமையாளர் நிரந்தரமாகவே பாலக்காட்டுக்கு குடிபெயர்ந்து விட்டாராம்)
Thnaks to Viruvirupu

சசிகலா வளையத்தில் இருந்து பிரேமலதாவுக்கு வந்த சூட்கேஸ்!

Posted: 24 Feb 2012 10:15 PM PST


சசிகலா வளையத்தில் இருந்து பிரேமலதாவுக்கு வந்த சூட்கேஸ்!

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் எரவுன்ட்-த-கார்னரில் தயாராக நிற்கும் நேரத்தில், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.-வின் தீவிர கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது விஜயகாந்தின் தே.மு.தி.க.! என்ன காரணம்? ஒருவேளை தே.மு.தி.க. ஜெயித்து விடலாம் என்ற பயமா?


அதெல்லாம் கிடையாது. வேறு வேறு விவகாரம்.


தமிழக அரசியல் அடுத்து எப்படித் திரும்பப் போகின்றது என்பதற்கான பதில், தே.மு.தி.க.-வின் சில நடவடிக்கைகளைப் பொறுத்தே உள்ளது என்கிறார்கள்.


தனித்துப் போட்டியிடுவதாக (ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது) தே.மு.தி.க. வெளிப்படையாக கூறினாலும், உள்ளே வேறு ஒரு டீல் ஓடிக்கொண்டு இருக்கிறதா என்ற சந்தேகம், அ.தி.மு.க., தி.மு.க. தலைமைகளுக்கு உள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லாமல் இருந்த விஜயகாந்தை போட்டியில் குதிக்க வைத்தது, ஜெயலலிதாவின் சட்டசபை 'உசுப்பேற்றல்' பேச்சு மட்டுமல்ல.


அதையும் தாண்டி, இதில் வேறு ஒரு விவகாரமும் உள்ளது.


இந்த இடைத்தேர்தலில் விஜயகாந்த், தி.மு.க.-வுடன் நெருங்கி வருவதற்கான சான்ஸ் கிட்டத்தட்ட ஃபைனல் ஸ்டேஜ்வரை வந்தபின், 'சில காரணங்களால்' திசை மாறியது. அதன்பின் தி.மு.க.-வும், தே.மு.தி.க.-வும் தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தனர். தி.மு.க.-வுடன் நெருங்கும் சான்ஸை கடைசி நிமிடத்தில் தட்டிவிட்டது விஜயகாந்த் தரப்புதான் என்பது எமக்கு கிடைத்த தகவல்.


தி.மு.க., தாம் பெரிய கட்சி என்ற பிரஸ்டீஜையும் பார்க்காமல், நன்றாகவே கீழிறங்கி வரத் தயாராக இருந்தது என்பதை தி.மு.க. வட்டாரங்கள் ஒப்புக் கொள்கின்றன. அப்படியிருந்தும் விஜயகாந்த் ஏன் தட்டிவிட்டார்?


தி.மு.க. வட்டாரங்களில் அடிபடும் கதையின்படி, விஜயகாந்தின் முடிவின் பின்னணியில் இருப்பது, அவரது மனைவி பிரேமலதா. தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவர், "அந்தம்மா சொந்தமாக வேறொரு டீல் பேசி முடிச்சிட்டாங்க. அது நம்ம (தி.மு.க.) தலைமைக்கும் தெரியும்" என்றார்.


நாம் விசாரித்தவரை, தி.மு.க. பிரமுகரின் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. இதற்குள் மற்றொரு டீல் ஓடத்தான் செய்கிறது.


விஜயகாந்துடன் நெருங்கிவர தி.மு.க. எந்தளவுக்கு கீழிறங்கி வர தயாராக இருந்தது? தி.மு.க. சோர்ஸ் தகவல்களின்படி, தமது சொந்த வேட்பாளரை நிறுத்தாமல், தே.மு.தி.க. வேட்பாளரை வெளிப்படையாக ஆதரிக்க தி.மு.க. தயாராக இருந்தது. அதுமட்டுமின்றி, தேர்தல் தே.மு.தி.க.-வின் செலவுகளை சமாளிக்க அறிவாலயம் 'கணிசமாக கவனிக்க' தயாராகவும் இருந்திருக்கிறது.


தி.மு.க.-வின் இந்த நிலைப்பாட்டுக்கு அவர்கள் கட்சிக்குள் அழகிரியின் எதிர்ப்பு இருந்தாலும், ஸ்டாலினின் பூரண ஆசி இருந்தது. அதுவே போதும் கூட்டணி உறுதியாகுவதற்கு. ஆனால், உறுதியாகவில்லை. (பாவம் அழகிரி, அவருக்கு இந்த விவகாரத்தில் எந்த பங்குமில்லை)


தி.மு.க.-வின் இந்த ஆதரவுக் கரத்தை பிரேமலதா தட்டி விட்டதன் காரணம், வேறு ஒரு தரப்பு தேர்தல் செலவுகளை 'கவனித்துக் கொள்வதாக' கூறி, இவர்களே மலைத்துப் போகும் அளவுக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகைதான் என்கிறார்கள். (அட்வான்சே அவ்வளவு என்றால்…)


அந்தப் பணத்தை கொடுத்தது யாரோ என்றாலும், பணத்தின் பாயின்ட் ஆஃப் ஒரிஜின், சசிகலா குடும்ப வளையங்களில் ஒன்று என்பதே இதிலுள்ள சுவாரசியமான அம்சம். இதில் சசிகலாவின் தொடர்பு நேரடியாக இல்லை என்று தெரிகிறது. ஆனால், அவருக்கு விஷயம் தெரிந்தும், எதிர்ப்பு காட்டவில்லை என்கிறார்கள்.


சமீபத்தில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்குழு கூட்டத்தில் ஹைலைட்டே, விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் பேச்சுதான் என்கிறார்கள் தே.மு.தி.க. வட்டாரங்களில். அதில் அவரது பேச்சு முழுவதுமே காரசாரமாக அ.தி.மு.க.வை தாக்கும் வகையில் இருந்ததாகவும் தே.மு.தி.க.-வினர் சொல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு நேரடியாக சவால்விட்டு பிரேமலதா பேசிய ஆவேசப் பேச்சுக்குதான் பொதுக்குழுவில ஆரவார வரவேற்பு அதிகம் இருந்தது என்கிறார்கள்.


தே.மு.தி.க.-வுக்கு கிடைத்த இந்த 'பின்னணி பைனான்ஸிங்', சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என்பதை இப்போதே சொல்லிவிடலாம். பைனான்ஸ் பண்ணியவர்களுக்கே இது ஜெயிக்கிற குதிரை அல்ல என்பது தெரிந்திருக்கும்.


ஆனால், தமிழக அரசியலில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வரக்கூடியது இந்த பைனான்ஸிங். தி.மு.க. அரசியல் ரீதியாகவும், அ.தி.மு.க. ஆளும்கட்சி என்ற ரீதியிலும் சில நகர்வுகளை அடுத்த சில தினங்களில் மேற்கொள்வதை பார்க்கப் போகிறீர்கள்.
Thanks to Viruvirupu

Junior Vikatan 29-02-2012 | Free Download Junior Vikatan PDF This week | Junior Vikatan 29th February 2012 ebook

Posted: 25 Feb 2012 12:46 AM PST


Junior Vikatan 29-02-2012 | Free Download Junior Vikatan  PDF This week | Junior Vikatan 29th February 2012 ebook

Download Link 1- Privacy Complaint

கார்த்தியும் இல்லை.. சூர்யாவும் இல்லை.. ஜீவா!

Posted: 24 Feb 2012 09:40 PM PST


கார்த்தியும் இல்லை.. சூர்யாவும் இல்லை.. ஜீவா!

அருள்நிதி நடிப்பில் வெளிவந்த படம்  'மெளனகுரு'. எந்த ஒரு எதிர்ப்பாப்பும் இல்லாமல் வந்து  வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சாந்தகுமார்.


அடுத்து சாந்தகுமார் இயக்கத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள், யார் தயாரிப்பாளர் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


இந்நிலையில் சாந்தகுமார் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க இருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் யார் நடிக்க இருக்கிறார் என்பது உறுதி செய்யப்படவில்லை.


ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் என்றாலே அதில சூர்யா அல்லது கார்த்தி தான் நாயகனாக நடிப்பார்கள். 'சில்லுனு ஒரு காதல்', 'சிங்கம்','சிறுத்தை', 'நான் மகான் அல்ல' உள்ளிட்ட படங்கள் அதற்கு சான்று.


ஆகவே சாந்தகுமார் இயக்க இருக்கும் படத்தில் கார்த்தி நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அந்த படத்தில் நடிக்க இருப்பது ஜீவா என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் முதன் முறையாக சூர்யா, கார்த்தி இல்லாமல் வேறு நாயகனை வைத்து தயாரிக்கும் முதல் படமாக இப்படம் அமைய இருக்கிறது.
Thanks to Vikatan

மனிதர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் ஃபேஸ்புக்!

Posted: 24 Feb 2012 09:36 PM PST


மனிதர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் ஃபேஸ்புக்!

நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சவுகரியத்தினை ஏற்படுத்தி உள்ள ஃபேஸ்புக் மனதளவில் சிறியவர்களையும், பெரியவர்களையும் பாதிப்பதாக செய்திகள் வெளியாகின. ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சமூகத்தில் இருந்து விலகி செல்வதாக இன்னொரு பகீர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோரது மன நிலை, அவர்களிடம் ஏற்படும் மனநல மாற்றங்கள் குறித்து 1.40 கோடி பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சமூகத்துடன் நெருங்கி பழகாமல், மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பதாக தெரிய வந்துள்ளது.
எந்த நேரமும் ஃபேஸ்புக் இவர்களை ஆக்கிரமித்து கொள்வதால் உடன் இருப்பவர்களை பற்றி கூட அதிகம் தெரிந்து கொள்ளவதற்கு தவறுவதாக சில தகவல்கள் கூறுகின்றனர். தூரத்தில் இருக்கும் நண்பர்களிடம் தகவல்களை அதிகம் பரிமாறி கொள்ள உருவான ஃபேஸ்புக், இப்போது அருகில் இருப்போரது நெருக்கத்தை குறைத்து கொண்டும் இருக்கிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே…!
Thanks to Gizbot

டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை அதிகரிக்க அரசு முடிவு!

Posted: 24 Feb 2012 09:31 PM PST


டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை அதிகரிக்க அரசு முடிவு!

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் நேரத்தை கூடுதலாக்க வாய்மொழியாக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். காலை 9 மணி முதல் இரவு 11 மணிவரை மதுபானக் கடைகளை திறக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதனால் பணியாளர்களுக்கு ஷிப்டு முறை தேவை என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க தலைவர் எஸ்.எஸ்.தியாகராஜன். பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:


டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 முதல் இரவு 10 மணிவரை நடத்துவதற்கு நடைமுறையில் உள்ளது.


ஆனால் காலை 9 மணி முதல் இரவு 11 மணிவரை நடத்த அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளனர்.


எங்கு எல்லாம் கூடுதல் நேரம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் 2 ஷிப்டு முறையில் பணியாளர்களை பணிநியமனம் செய்து அதிகாரப்பூர்வமான விற்பனையை நடத்துவதன் மூலம் வருமானம் பெருகும்.


பணியாளர்களின் அச்ச உணர்வையும் போக்கலாம்.


பார்களில் விற்பனையாகும் அதிகாரப்பூர்வமற்ற மதுபானங்களை தடை செய்யவேண்டும்.


பணியாளர்களுக்கு பணிபாதுகாப்பு, பணிநிரந்தரம், தக்க ஊதியம் ஆகியவற்றை நிர்ணயம் செய்ய நிபுணர் குழுவை அமைக்கவேண்டும்.


டாஸ்மாக் நிர்வாக இயக்குனரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.


நிலுவையில் உள்ள மருத்துவ நலநிதியை வழங்க வலியுறுத்தினோம். வேலூர் மாவட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 17 பேருக்கு பணி வழங்க கூறினோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Thanks to OneIndia

Kumudam Reporter 01-03-2012 | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 1st march 2012 ebook Latest

Posted: 25 Feb 2012 12:45 AM PST


Kumudam Reporter 01-03-2012 | Free Download Kumudam Reporter PDF This week | Kumudam Reporter 1st march 2012 ebook Latest

Download link - Privacy Problem

http://adf.ly/5kL4F


Download Link -Working


http://adf.ly/5ks4F


(Note : File Not working pl comment..we will update Soon..)

சினிமா"3" படம் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது

Posted: 24 Feb 2012 07:51 PM PST


சினிமா"3" படம் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது

எப்போ வரும் எப்போ வரும் என்று தமிழ் ரசிகர்களால் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 3 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. ஆம், தனுஷ்-சுருதிஹாசன் நடித்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் "3" படம் மார்ச் மாதம் 30ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா, ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூகுட்டியின் பின்னணி இசையுடன், "3" படம் வெளிவரயிருக்கிறது. படத்திற்கு ரசூல் பூகுட்டியின் பின்னணி இசை பலம் சேர்த்துள்ளது. நிச்சயமாக இப்படம் அவருக்கும் பலம் சேர்க்கும்.
முதலில் பின்னணி இசைக்கு அவரை அணுகியபோது "3" படத்தில் பணியாற்ற அவர் விரும்பவில்லை. வாய்ப்பை மறுத்துவிட்டார். பின்னர் "3" படத்திற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து அவரே தன்னை இப்படத்தில் இணைத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார் என்று கஸ்தூரிராஜா கூறினார்.
"3" படம் நிச்சயமாக தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஐஸ்வர்யாவைப் பற்றி கஸ்தூரிராஜா கூறுகையில், திறமையான தயாரிப்பாளர் ஒருவர் விரைவில் தமிழ் திரையுலகிற்கு கிடைக்கிவிருக்கிறார். உணர்ச்சிபூர்வமான காட்சிகளை ஐஸ்வர்யா நன்று படம்பிடிக்கிறார் என்று குறிப்பிட்டார்.
வொய் திஸ் கொலவெறி பாடல் வெற்றியடைந்ததற்குப் பிறகு "3" படம் எப்போ வரும் என்று தமிழ் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். அவர்களது ஏக்கம் தீர்ப்பதற்கான நாள் குறிக்கப்பட்டுவிட்டது.
Thanks to Dinamani

ஜெ-க்கு எதிராக குற்றம் சுமத்த கங்கை அமரனை போலீசார் மிரட்டினார்கள் - சசிகலா

Posted: 24 Feb 2012 07:49 PM PST


ஜெ-க்கு எதிராக குற்றம் சுமத்த கங்கை அமரனை போலீசார் மிரட்டினார்கள் - சசிகலா

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்காகவே இயக்குநர் - இசையமைப்பாளர் கங்கை அமரனை போலீசார் மிரட்டினார்கள் என்று பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சசிகலா தெரிவித்தார்.


தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.


இப்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று 3-வது நாளாக தனிக்கோர்ட்டில் ஆஜரானார். நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் விசாரணை நடந்தது.


ஆட்சேபனை


அரசு தரப்பு வக்கீல் ஆச்சார்யா வாதிடுகையில், "சசிகலா வலுவான குரலில் பதிலளிக்க வேண்டும். குறிப்பு எழுதி வைத்து கொண்டு பதிலளிக்க கூடாது. அவருக்கு மேஜை வழங்கியிருப்பது சரியல்ல'' என்றார்.


இதற்கு சசிகலா தரப்பு வக்கீல் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். "இது குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை. குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கு அவருக்கு போதிய உரிமை உள்ளது. தேவைப்படும் நேரங்களில் பதிலை விரிவாக சொல்வது அவசியம்'' என்று அவர் வாதம் செய்தார்.


அப்போது குறுக்கிட்ட நீதிபதி மல்லிகார்ஜுனையா, "ஏதாவது மறந்து இருந்தால் கோர்ட்டில் உள்ள ஆவணங்களை பெற்று பதிலளிக்கலாம்'' என்று உத்தரவிட்டார். இதனால் இரு தரப்பு வக்கீல்களின் ஆட்சேபனை விவகாரம் முடிவுக்கு வந்தது.


சசிகலாவிடம் கடந்த 2 நாட்களாக 63 கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன. நேற்று மட்டும் 40 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதுவரை 103 கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.


சொத்து வாங்கிய விவகாரம் தொடர்பாகவே நேற்றைய கேள்விகள் இடம் பெற்று இருந்தன. அப்போது பெரும்பாலான கேள்விகளுக்கு சசிகலா பதிலளிக்கையில், "சொத்துகள் வாங்கியதில் ஜெயலலிதாவுக்கு சம்பந்தம் இல்லை. வேண்டுமென்றே அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது,'' என்றார்.


கங்கை அமரன் மிரட்டப்பட்டாரா?


"செங்கல்பட்டு அருகே உள்ள பையனூரில், இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள பண்ணை வீட்டை கட்டாயப்படுத்தி வாங்கினீர்களா?'' என்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு சசிகலா பதிலளிக்கையில், "கங்கை அமரனின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அந்த நிலம் வாங்கப்பட்டது. எங்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவதற்காக அவரை போலீசார் மிரட்டி பணிய வைத்து உள்ளனர்'' என்றார்.


இன்றும் (சனிக்கிழமை) வழக்கு விசாரணை நடக்கிறது. அப்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பெறப்படுகிறது.


சுதாகரன், இளவரசி ஆகியோரும் நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.


கங்கை அமரன் விவகாரம் என்ன?


ஜெயலலிதா முதல்முறை பதவிக்கு வந்தபோது, தனக்கு சொந்தமாக பையனூரில் இருந்த 22 ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை மிரட்டி ஜெயலலிதாவும் சசிகலாவும் வாங்கியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து பேசியதற்காக தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
Thanks to OneIndia

வருமான கணக்கு விவரங்கள்: வெளியிட சோனியா மறுப்பு

Posted: 24 Feb 2012 07:43 PM PST


வருமான கணக்கு விவரங்கள்: வெளியிட சோனியா மறுப்பு

புதுடில்லி: "வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கை பற்றிய விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், வெளியிட முடியாது' என, காங்., தலைவர் சோனியா, மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


சென்னையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் வி.கோபாலகிருஷ்ணன் என்பவர், "கடந்த 2001-2011 வரையிலான காலத்தில், காங்., தலைவர் சோனியா தாக்கல் செய்த வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கை பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார். இது பற்றிய விவரங்களை வெளியிட, சோனியா மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. "வருமான வரித் துறையினரின் ஆய்வுக்காகவே, கணக்கு தாக்கல் அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த தகவல்களை பகிரங்கமாக வெளியிட்டால், அவை, தவறாக பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது' என, சோனியா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியாவின் இந்த பதிலுக்கு, காங்., மூத்த தலைவர்கள் சிலரும், ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
Thanks to Dinamalar

Dinkaran E-paper 25-02-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 25th February 2012

Posted: 24 Feb 2012 07:41 PM PST


Dinkaran E-paper 25-02-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 25th February 2012

Download Links



Dinamalar Aanmeegamalar 25-02-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 25th February 2012

Posted: 25 Feb 2012 01:03 AM PST


Dinamalar Aanmeegamalar 25-02-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 25th February 2012

Download Link 1- Provacy problem

Dinamalar E-paper 25-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 25th February 2012

Posted: 25 Feb 2012 01:04 AM PST


Dinamalar E-paper 25-02-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 25th February 2012

Download Link - 1 - privacy problem

http://adf.ly/5kNTz

Download Link - 2 - Working

http://adf.ly/5lCEr

பிரபுசாலமன் இயக்கத்தில் ஆர்யா !

Posted: 24 Feb 2012 11:59 AM PST


பிரபுசாலமன் இயக்கத்தில் ஆர்யா !

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போது  'வழக்கு எண் 18/9 ', 'கும்கி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இவ்விரண்டு படங்களையும் யுடிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.


மேலும், விஷால் நடிக்கும் அடுத்த படத்தினையும், 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்க இருக்கும் அடுத்த படத்தினையும் தயாரிக்க இருக்கிறது.


சரவணன் இயக்க இருக்கும் படத்தின் நாயகனாக ஆர்யா நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படத்தில் இருந்து ஆர்யா விலகிவிட்டார்.


ஆர்யா இப்படத்தில் இருந்து விலகி இருந்தாலும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை இயக்க இருக்கிறார் பிரபு சாலமன்.


ஆர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'இரண்டாம் உலகம்' படத்தில் பிஸியாக இருக்கிறார். பிரபு சாலமன் 'கும்கி' படத்தில் மும்முரமாக பணியாற்றி வருகிறார்.


இவ்விருவரும் தங்களது படபணிகளை முடித்தவுடன் இணைகிறார்கள். வேறு யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
Thanks to Vikatan

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்!

Posted: 24 Feb 2012 11:56 AM PST


என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்!

விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும்.  முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை.


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.


'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில் விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று காட்சி அமைத்து இருக்கிறார்கள்.


தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு தனது உடம்பை மாற்றி வருகிறாராம்
Thanks to Vikatan

கோடையை சமாளிக்க ஜில்லுனு ஜூஸ் குடிங்க….

Posted: 24 Feb 2012 11:52 AM PST


கோடையை சமாளிக்க ஜில்லுனு ஜூஸ் குடிங்க….

கோடையை உணர்த்தும் விதமாக காலை நேரத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. என்னதான் வெயில் என்றாலும் வேலை மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக வெளியில் சென்றுதான் தீரவேண்டும். வெப்பத்தினால் உடலில் நீர்சத்து குறைவதோடு நாவறட்சியும், தாகமும் ஏற்படுகிறது. எனவே கோடையை சமாளிக்க பழச்சாறுகளை உட்கொண்டால் வெப்பத்தினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை சமாளிக்கலாம். உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் கிடைக்கும். 


சுக்கு மல்லி மூலிகைச் சாறு


கோடை காலத்தில் உஷ்ணத்தினால் பித்தநோய் ஏற்படுவது இயல்பு. எனவே இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சுக்கு தட்டிப்போட்டு அதனுடன் கொத்தமல்லியை பொடி செய்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். அதில் பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து ஆறவைத்து அருந்த வேண்டும். இதனால் பித்த நோய் குணமாகும்.


மாம்பழச் சாறு


மாம்பழத்தை நன்றாக தோல் உறித்து அதனுடன் பால் கலந்து மிக்சியில் அடித்து ஐஸ் சேர்த்து கோடைக்கேற்ற குளுமையான சத்தான பானத்தை அருந்தலாம்.


தர்பூசணிப்பழச் சாறு


கோடையின் கொடுமையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் தர்பூசணி பழத்தை அதிகம் உண்ணலாம். இந்தப் பழத்தை சாறு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு என்னும் நோயுடன் சிறுநீர் வெளியேறும் போது தோன்றும் பல்வேறு குறைபாடுகளும் நீங்கும். நீரிழிவும் கட்டுப்படும். தர்பூசணிப்பழச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறுடன் சமஅளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும்.


எலுமிச்சைச் சாறு


உடல் களைப்பு, கை, கால் மூட்டுக்களில் உள்ள கணுக்களில் வீக்கம் வலி ஆகியவை இருந்தால் எலுமிச்சைச்சாறுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம்.பழுத்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலுந்து குழைத்து உண்ண மலக்குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய்கள் வராது தடுக்கலாம்.


எலுமிச்சைச் சாறுடன் தேன் அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லிட்டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய்கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்தும்போது குடல் தன் பலத்தை இழக்க நேரிடும்.


இளநீர் பானம்


இளநீரை எந்த பருவத்திலும் அருந்தலாம். கோடையில் இளநீர் ஏற்ற பானம். இளநீருடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும். வெள்ளை வெங்காய சாறுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமாகும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச் சாறுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.


தக்காளிச் சாறு


தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்படுவதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக்கும் ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகான சத்துடன் விலை மலிவாக கிடைக்கும்.


கோடை காலத்தில் தக்காளிச் சாற்றை நாள்தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண்டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியாதியும் கட்டுப்படும். சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும்.


ஆப்பிள் பழச்சாறு


ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல், உடல்களைப்பு, வேளையில் ஆர்வமின்மை போன்றவற்றை குணமாக்கும் தன்மையுள்ளது. ஆப்பிள் பழச்சாறுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ், ஏலம் ஆகியவற்றை கலந்து அருந்த ரத்த சோகை குணமாகும். மேலும் கர்ப்பிணி பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைகளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.


திராட்சை பழச் சாறு


கோடையில் திராட்சைச் சாறு தொடர்ந்து அருந்தி வர இரத்த அழுத்தகுறைவு, நரம்பு தளர்ச்சி, குடற்புண், காமாலை, வாயுகோளாறுகள், மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச் சாறுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருக்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க்கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.


ஆரஞ்சு பழச் சாறு


ஆரஞ்சு பழச்சாறு அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ஜீரணம் செய்ய தகுந்தது. இருதய நோய்கள் எளிதில் குணமாகும். டைபாய்டு, ஜுரம் ஆகியவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்துவதால் சிறுநீர் தாராளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும்.


இச்சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்தும் அருந்தலாம் தொண்டையில் புற்றுநோய் கொண்டு எந்த உணவும் உட்கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களுக்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ளவர்கள் இச்சாற்றை துளி துளியாக அருந்தி உடல் நலம் பெறலாம்.


பாதாம் பால், தேன்


பாதாம் பருப்பை நன்கு பொடித்து அதனுடன் காய்ச்சிய பாலை ஊற்றி, அதில் தேன் கலந்து ஏலக்காய் தட்டிப்போட்டு காய்ச்சி ஆறவைத்து ஃப்ரிட்ஜ்ல் வைத்து குடிக்கலாம் கோடைக்கேற்ற சத்தான பானம் இது.
Thanks to OneIndia

முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ்!

Posted: 24 Feb 2012 11:50 AM PST


முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ்!

உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.


சர்வ ரோக நிவாரணி


ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.


நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.


தினமும் ஒரு கப் ஓட்ஸ்


தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.


இதயநோய்


இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது. 


இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்


பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.


மகிழ்ச்சியான வாழ்க்கை


11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.
Thanks to OneIndia

உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்

Posted: 24 Feb 2012 11:47 AM PST


உறவுகளை மேம்படுத்த உன்னத வழிகள்

உறவுகளை மேன்மைப்படுத்த தவறியதன் விளைவாக , வாழ்க்கையில் எல்லாமே நமக்கு எதிராக இருப்பதைப்போன்ற எண்ணம் ஏற்படுகிறது. அவசரத்தில் நாம் எடுக்கும் எந்த ஒரு சின்ன விஷயமும் நமக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிடுகிறது. நிதானமாக யோசித்தால், நாம் பெரிதுபடுத்திய பல விஷயங்கள் அற்ப விஷயங்கள் என்பது புலனாகும். எதையுமே சாதாரணமாக எடுத்துக்கொண்டால் வாழ்க்கை எளிமையாகி விடுகிறது. உறவுகளை மேம்படுத்த உளவியாலாளர்கள் கூறிய ஆலோசனை பின்பற்றுங்கள் வெற்றிப்பாதைகள் தானாகவே திறக்கும்.


தவறான மனோபாவம்


சின்ன விஷயங்களைச் சின்ன விஷயங்களாக நாம் பார்க்க முடியாதபோது இனிய உறவுகளைக்கூட அவை பாதித்து விடுகின்றன. நாம் சிறு விஷயங்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிவிட்டால், அவை சக்தி இழந்து செயலற்றுப் போய் விடுகின்றன. யோசித்துப் பார்த்தால் எல்லாமே சின்ன விஷயங்கள்தான். ஒரு விஷயத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் தன்மையும் அமையும். எல்லாவற்றுக்கும் நம்முடைய மனம்தான் காரணம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல இடர்ப்பாடுகளுக்கும் நம்முடைய தவறான மனோபாவங்களே காரணமாகின்றன.


முழுமையாக கேளுங்கள்


ஒருவருடன் பேச ஆரம்பிக்கும்போது, அவர் பேசுவதை முழுமையாகக் கேட்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள். குறுக்கிட வேண்டும் என்று தோன்றினாலும் குறுக்கிடாதீர்கள். அவர் சொல்வதை நீங்கள் முழுமையாகக் கேட்ட பிறகு, நீங்கள் என்ன சொல்ல வேண்டுமென்பதைத் தீர்மானித்துத் தெளிவாகப் பேசுங்கள். மற்றவர்களை நீங்கள் பேச அனுமதித்து அக்கறையுடன் கவனிக்கின்றபோது, நீங்கள் சொல்வதையும் கவனிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கும் தானாகவே ஏற்பட்டு விடும். இதைக் கடைபிடிக்க ஆரம்பித்தால் கருத்துப் பரிமாற்றம் எளிதாகும். மற்றவர்கள் அன்பும் சுலபமாகக் கிடைக்கும்.


எதிராளியை சந்தோசப்படுத்துங்கள்


ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டிருப்பது நம்முடைய வேலை அல்ல. அது சாத்தியமுமில்லை. நம்முடைய நேரம்தான் வீணாகும். நம்முடைய குறைபாடுகளே நிறைய இருக்கும்போது, அவற்றை திருத்திக்கொள்ள முயற்சிக்காமல் மற்றவர்களை விமர்சிப்பது வீண் வேலை.


எதிராளியை மகிழ்ச்சிப்படுத்துங்கள்


நாம் நினைப்பதுதான் சரியாகவே இருக்கும் என நிரூபிப்பது அவசியமில்லை. நம்முடையதும், பிறருடையதும் சரியாக இருக்கும். பல சந்தர்ப்பங்களில் இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதில்லை. இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நம்முடைய அளவுகோல்களை வைத்துக் கொண்டு பிறருடைய அபிப்ராயங்கள் நம்மைப் பாதிக்காதவரை அதை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நிலை மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால், அதைக் கெடுக்காமல் அதில் நாமும் பங்கு பெறலாம்.


வாழ்க்கை எளிதாகும்


திருப்தி என்பது தொடுவானம் போன்றது. நெருங்க நெருங்க தூர விலகிச் சென்று கொண்டே இருக்கும். எனவே கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். நாம் விரும்பியது கிடைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அதையே நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. எது கிடைக்கிறதோ, அதை விரும்ப கற்று கொள்ள வேண்டும். விரும்புகின்றபடியே எல்லாம் நடக்காது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நமக்கக் கிடைத்ததை விரும்புகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் வாழ்க்கை இலகுவாகி விடும்.


எதிர்மறைகளை விலக்குங்கள்


எதிர்மறையான, பலவீனமான எண்ணங்கள் மன அமைதியைத் தகர்த்து சீர்குலையச் செய்யும் சக்தி படைத்தவை. ஒரு எதிர்மறை எண்ணம் இன்னொரு எதிர்மறை எண்ணத்துக்கு உங்களை இட்டுச் சொல்கிறது. இதன் விளைவாக குழப்பம் மிக்க மனநிலைக்கு ஆளாவீர்கள். மேலும் மனமானது கவலை களும் வேதனைகளும் நிரம்பிய குப்பைத் தொட்டியாகி விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அல்லது கவலைகள் மனத்தில் வேகம் பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக, பிரச்னைகள் பற்றிய கவலைகளே அதிகமாகி மனத்தில் பாரம் அதிகரித்து விடுகிறது.


நிதானத்தை கடைபிடியுங்கள்


நாம் விரும்புகின்ற விஷயங்களே நம்மைச் சுற்றி நிகழ வேண்டும் எதிர்ப்பார்ப்பது வீண். இருப்பதை அல்லது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டால் பொறுமையினை இழக்க வேண்டிய அவசியமே இருக்காது. பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகி விடும். மற்றவர்களின் செயல்களைக் கண்டு பொறுமை இழக்காதீர்கள். அவர்கள் செய்வது அறியாமையின் விளைவு என்று நீங்கள் நினைத்தால், பொறுமை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.


மன அமைதியே மனித ஆற்றலின் ஊற்றுக் கண்ணாகவும் விளங்குகிறது. அமைதி நிலையில்தான் ஆற்றலை முழுமையாக ஒருமுகப்படுத்தவும் முடியும். எனவே, மன அமைதிக்கு முதலிடம் கொடுங்கள், உறவுகள் கூடிவரும், சாதனைகள் தொடரும்.
Thanks to OneIndia