TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


Sun Tv Thiraivaanam 18-02-2012

Posted: 18 Feb 2012 03:34 AM PST


Sun Tv Thiraivaanam 18-02-2012


Suntv news 18-02-2012 Afternoon | Sun Tv News 18-02-2012 | Sunnews 18th February 2012

Posted: 18 Feb 2012 03:33 AM PST


Suntv news 18-02-2012 Afternoon | Sun Tv News 18-02-2012 | Sunnews 18th February 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Apadi Podu 18-02-2012 | Sun tv Apadi Podu 18th February 2012

Posted: 18 Feb 2012 03:32 AM PST


Apadi Podu 18-02-2012 | Sun tv Apadi Podu 18th February 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

Aaha Enna Rushi 18-02-2012 | Sun Tv Aaaha Enna Rushi 18th February 2012

Posted: 18 Feb 2012 03:32 AM PST


Aaha Enna Rushi 18-02-2012 | Sun Tv Aaaha Enna Rushi 18th February 2012


This posting includes an audio/video/photo media file: Download Now

'ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு!' - நீதிபதி முன் கதறியழுத சசிகலா

Posted: 18 Feb 2012 02:03 AM PST


'ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு!' - நீதிபதி முன் கதறியழுத சசிகலா
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஆதாரமாகக் காட்டப்படும் எதிலுமே ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை. எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு என்று சசிகலா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இதைச் சொல்லிவிட்டு நீதிபதி முன்பு கதறி அழுதாராம் சசிகலா. 


முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது நண்பர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு 15 ஆண்டு கால இழுத்தடிப்புக்குப் பின் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. அண்மையில் இந்த வழக்கில் இருமுறை நேரில் ஆஜராகி ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு வந்தார் ஜெயலலிதா. 


இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை நிச்சயம் என்று கூறப்பட்ட நிலையில், அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக உடன்பிறவா சகோதரி என்ற அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.


இந்த நிலையில், இப்போது சசிகலாவிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளது பெங்களூர் தனி நீதிமன்றம். தனக்கு தமிழ் தவிர வேறு மொழி தெரியாது என்ற ஒரு காரணத்தைச் சொல்லியே 8 ஆண்டுகளுக்கு மேல் வழக்கை இழுத்தடித்து வந்தவர் சசிகலா. ஆனால் இனியும் வழக்கை இப்படி நீட்டிக்க முடியாது என அத்தனை நீதிமன்றங்களும் சொல்லிவிட்டன. 


எனவே வேறு வழியின்றி இந்த முறை சசிகலா, இளவரசு, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோர் நேரில் விசாரணைக்கு ஆஜராகினர். 


கடைசி முயற்சியாக, 'சசிகலாவிடம் தமிழில் கேள்வி கேட்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்து இருப்பதால் வழக்கை வருகிற மார்ச் 2-ந் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும்' என்று சசிகலா தரப்பு வக்கீல் மனு கொடுத்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார். 


இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை தொடங்கியது. நீதிபதியின் கேள்விகளை சசிகலாவுக்கு தமிழில் மொழிப் பெயர்த்துச் சொல்ல ஹரீஸ் என்ற மொழி பெயர்ப்பாளர் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் நீதிபதியின் கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்துச் சொன்னார். 


சசிகலா தந்த பதில்களை ஆங்கிலத்தில் நீதிபதிக்கு மொழிபெயர்த்தார் ஹரீஸ். 


கதறி அழுத சசி


பல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது கதறி அழுதாராம். 


வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அழுதார்.


ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்களை கவனித்துக் கொண்டது நான்தான் என்றும், ஜெயலலிதாவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.


சொத்துக் குவிப்பு வழக்கில் இரண்டாவது குற்றவாளி சசிகலா. முதல் குற்றவாளி ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan 22-02-2012 | Free Download Junior Vikatan latest PDF This week | Junior Vikatan 22nd February 2012 e-book

Posted: 18 Feb 2012 03:24 AM PST


Junior Vikatan 22-02-2012 | Free Download Junior Vikatan latest PDF This week | Junior Vikatan 22nd February 2012 e-book

Download Link

திருமணமா... எனக்கா... என்ன விளையாடறீங்களா?! - தமன்னா ஆவேசம்

Posted: 18 Feb 2012 01:06 AM PST


திருமணமா... எனக்கா... என்ன விளையாடறீங்களா?! - தமன்னா ஆவேசம்

நான் இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கு. இந்த நேரத்தில் தேவையில்லாமல் எனக்கு திருமணம் என்றெல்லாம் எழுதலாமா என்று சூடாகக் கேட்டுள்ளார் தமன்னா.


தமன்னாவுக்கும் இன்னொரு நடிகருக்கும் காதல் என்றும், தமன்னா திருமணத்துக்குத் தயாராவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.


அவர் தற்போது தெலுங்கில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் வந்த தமிழ்ப்பட வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 


இந்த நிலையில், அஜய் தேவ்கனுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் உதறியிருக்கிறார் தமன்னா. எனவே திருமண செய்தியில் எதுவும் உண்மை இருக்குமோ என்ற கேள்வியை அவரிடமே கேட்டனர் நிருபர்கள்.


இதற்கு பதிலளித்த தமன்னா, "தெலுங்கில் மூன்று படங்களை நான் முடிக்க வேண்டி உள்ளது. மூன்றுமே பெரிய படங்கள். அதனால்தான் வேறு வாய்ப்புகளில் கவனம் செலுத்தவில்லை. அடுத்து நான் தமிழில் ஒரு படம் ஒப்புக்கொள்ளவிருக்கிறேன். அதனால்தான் இந்திப் பட வாய்ப்பையே வேண்டாம் என்று கூறிவிட்டேன். 


அடிக்கடி என் திருமணம் எப்போது என மீடியா கேட்டு வருகிறது. என் திருமணத்தில் இவ்வளவு அக்கறை காட்டுவதற்கு நன்றி. ஆனால் நான் சின்னப் பொண்ணு. இன்னும் எவ்வளவோ சாதிக்க வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் திருமணம் பற்றி எழுத ஒன்றுமே இல்லையே," என்றார்.
Thanks to OneIndia

ஹன்ஸிகாவை சுற்றி வளைத்து கோவை ரசிகர்கள் 'கசமுசா'!

Posted: 18 Feb 2012 01:04 AM PST


ஹன்ஸிகாவை சுற்றி வளைத்து கோவை ரசிகர்கள் 'கசமுசா'!
கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார் நடிகை ஹன்ஸிகா. அவரை தொட்டுப்பார்க்க ரசிகர்கள் பலர் முண்டியடித்ததால் கைகளிலும், இடுப்பிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட்டு அவதிக்குள்ளானார்.


நேற்று கோவை நகருக்கு வந்திருந்தார் ஹன்ஸிகா. அப்போது அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடிவிட்டனர். அவரை மிக அருகில் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும் முண்டியடித்தனர்.


இதனால் திணறிப் போனார் ஹன்ஸிகா. பலர் அவரைக் கிள்ளினர். வேகமாக அவரைப் பிடித்து இழுத்ததால் அவர் உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டது.


இதனால் அலறித் துடித்த ஹன்ஸிகாவை பக்கத்திலிருந்த போலீசார் வந்து மீட்டனர்.


இதுகுறித்து ஹன்ஸிகா கூறுகையில், "ரசிகர்கள் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டனர். நல்ல வேளை போலீசார் வந்து மீட்டனர். நிச்சயம் இனி செக்யூரிட்டியை பலப்படுத்தினால்தான் வெளியில் செல்ல முடியும்," என்றார்.


ஏற்கெனவே சென்னையில் இதே அனுபவத்துக்குள்ளானார் ஹன்ஸிகா என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks to oneindia



Chutti Vikatan 29-02-2012 | Free Download ChuttiVikatan latest PDF This week | Chutti Vikatan 29th February 2012 e-book

Posted: 18 Feb 2012 12:54 AM PST


Chutti Vikatan 29-02-2012 | Free Download ChuttiVikatan latest PDF This week | Chutti Vikatan 29th February 2012 e-book

Download Link

அழகிரி ஏர்போர்ட்டில் ‘சவுண்டு விட்ட’ பின்னணி தெரியுமா?

Posted: 17 Feb 2012 08:19 PM PST


அழகிரி ஏர்போர்ட்டில் 'சவுண்டு விட்ட' பின்னணி தெரியுமா?

மலேசியாவில் இருந்து நாடு திரும்பியவுடன் அழகிரி, "தலைவர் பதவி கொடுத்தால் தாராளமாக ஏற்றுக் கொள்வேன்" என்று கூறியதன் பின்னணி, ஒருவித பேரம் பேசல் என்கிறார்கள் தி.மு.க. உள்வட்டங்களில். பேரம் பேசல் என்றாலே சற்று அதிகமாகத்தான் தொடங்க வேண்டும். இவர் 'டாப்பில்' தொடங்கியிருக்கிறார்.


ஆனால் டார்கெட், தமக்கும் கலைஞர் டி.வி.-யில் உரிய பங்கு வேண்டும் என்ற ஆங்கிள்தான் என்கிறார்கள்.


ஸ்பெக்ட்ரம் விவகாரத்துடன்தான் கலைஞர் டி.வி. உள்கட்சி விவகாரங்களில் அதிகம் எக்ஸ்போஸ் ஆகியது. நிர்வாகப் பொறுப்பில் கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவரையும் வைத்துக் கொண்டு ஃபன்ட் ட்ரான்ஸாக்ஷன் அதன் ஊடாக நடந்த கதை வெளிச்சத்துக்கு வந்தது. அதில் அழகிரிக்கு எந்தப் பங்கும் கிடையாது!


கோடிக்கணக்கில் பணம் பாய்ந்தது கலைஞர் டி.வி. என்ற விவகாரம் கோர்ட்வரை சென்று விட்டதில், (கனிமொழியும் சரத்குமாரும் சிறையில் இருந்தபோதே) நிர்வாகத்தில் இருந்த அவர்களை மாற்றினார்கள். விவகாரம் கோர்ட்டில் இருந்ததால் அழகிரி அப்போதும் அதில்  ஆர்வம் காட்டவில்லை. சந்தடி சாக்கில் ஸ்டாலின் தனது ஆளை கலைஞர் டி.வி.க்குள் புகுத்தி விட்டார்.


ஸ்டாலின் ஆள் வக்கீல் கல்யாணசுந்தரம் இப்போது கலைஞர் டி.வி.-யில் ஆல்-இன்-ஆல்.


தி.மு.க. பொதுக்குழுவில் நடந்த கலாட்டாக்களும், அதைத் தொடர்ந்து நடந்த விவகாரங்களும் மீடியாக்களில் ஸ்டாலினுக்கு ஆதரவாகவே (அல்லது அழகிரியை மட்டம் தட்டும் விதத்திலேயே) வெளியாகின. அடுத்த அடியாக, அழகிரி பிறந்தநாள் விளம்பரங்கள் சில முரசொலியில் 'இடமில்லை' என்று திருப்பி விடப்பட்டன.


விஷயம் என்னவென்று அழகிரி பார்த்தால், முரசொலி நிர்வாகத்துக்குள் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டு, அவர்தான் முரசொலியின் நிர்வாகத்தில் டிசிஷன் மேக்கர்.


கட்சியின் பவர்ஃபுல் மீடியா விங் முழுமையாக ஸ்டாலின் கைகளுக்கு போய்விட்டதை புரிந்துகொண்ட அழகிரி, மலேசியாவில் இருந்தபடியே, கலைஞர் டி.வி.-யில் தமக்கு உரிய பங்கு கொடுக்கப்பட வேண்டும் என்று வைத்த கோரிக்கைக்கு இன்னமும் பதில் இல்லை என்கிறார்கள். அதற்கான காய் நகர்த்தல்களை அழகிரி தொடங்கி விட்டார் என்றே தெரிகிறது.


அதன் முதல் கட்டமாகவே, "தலைமைப் பதவிக்கு எனக்கும் எலிஜிபிளிட்டி உள்ளது" என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.


நிலைமை தீவிரம் என்று ஸ்டாலின் நினைத்தால் மட்டுமே, 'உள் செட்டில்மென்ட்' ஏதாவது நடந்து, அழகிரியின் வாயை அடைப்பார்கள். அழகிரியின் சார்பில் யாராவது (மகனோ, மகளோ) கலைஞர் டி.வி. நிர்வாகத்தில் இணைந்து கொள்வார்.


இல்லாவிட்டால்? அழகிரி அவ்வப்போது சவுண்டு விட்டுக்கொண்டு இருப்பார்.

Vijay Tv Oru Kodi Show 27-02-2012 | Actor Surya's neenkalum vellalaam Oru Kodi 27th February 2012 Promo Video

Posted: 17 Feb 2012 08:15 PM PST


Vijay Tv Oru Kodi Show 27-02-2012 | Actor Surya's neenkalum vellalaam Oru Kodi 27th February 2012 Promo Video

This posting includes an audio/video/photo media file: Download Now

Mun Jenmam 18-02-2012 | Vijay tv Thriller Serial MunJenmam 18th February 2012

Posted: 17 Feb 2012 08:12 PM PST


Mun Jenmam 18-02-12 | Vijay tv Thriller Serial MunJenmam 18th February 2012



Update coming soon.....

This posting includes an audio/video/photo media file: Download Now

Home Sweet Home 18-02-2012 | Vijay Tv Home Sweet Home 18th February 2012

Posted: 17 Feb 2012 08:11 PM PST


Home Sweet Home 18-02-12 | Vijay Tv Home Sweet Home 18th February 2012



Update coming soon..

This posting includes an audio/video/photo media file: Download Now

Oru vaarthai Oru Laksham 18-02-2012 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 18th February 2012

Posted: 17 Feb 2012 08:10 PM PST


Oru vaarthai Oru Laksham 18-02-12 | Vijay Tv Oru vaarthai Oru Laksham 18th February 2012


Update coming soon..


This posting includes an audio/video/photo media file: Download Now

Adhu Idhu Eadhu 18-02-2012 | Vijay Tv Adhu Edhu Eadhu 18th February 2012

Posted: 17 Feb 2012 08:09 PM PST


Adhu Idhu Eadhu 18-02-12 | Vijay Tv Adhu Edhu Eadhu 18th February 2012
Update coming soon...

This posting includes an audio/video/photo media file: Download Now

Perithinum Perithu Kel 18-02-2012 | Vijay Tv Show Perithinum Perithu Kel Spl Collage competition Show 18th February 2012

Posted: 17 Feb 2012 08:09 PM PST


Perithinum Perithu Kel 18-02-2012 | Vijay Tv Show Perithinum Perithu Kel Spl Collage competition Show 18th February 2012


Update coming soon...

This posting includes an audio/video/photo media file: Download Now

Vijay tv Ungalil Yaar Adutha Prabhudeva Season 2 This Promo video 19-12-2011

Posted: 17 Feb 2012 08:08 PM PST


Vijay tv Ungalil Yaar Adutha Prabhudeva Season 2 This Promo video 19-12-2011

This posting includes an audio/video/photo media file: Download Now

Thirumathi Selvam This week Promo video

Posted: 17 Feb 2012 08:07 PM PST


Thirumathi Selvam This week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Azhagi This week promo

Posted: 17 Feb 2012 08:06 PM PST


Azhagi This week promo

This posting includes an audio/video/photo media file: Download Now

Muppozhudhum un karpanaigal Movie Video Song - Oru Murai Remix Song-GV.Prakash

Posted: 17 Feb 2012 07:42 PM PST

-

Muppozhudhum un karpanaigal Movie Video Song - Oru Murai Remix Song-GV.Prakash


This posting includes an audio/video/photo media file: Download Now

Dinkaran E-paper 18-02-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 18th February 2012

Posted: 17 Feb 2012 07:38 PM PST


Dinkaran E-paper 18-02-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 18th February 2012

Download Link

ஸ்டாலினுக்கு ‘திக்’ தெளிவு, “தலைவரு டபுள் கேம் ஆடறாங்க”

Posted: 17 Feb 2012 07:35 PM PST


ஸ்டாலினுக்கு 'திக்' தெளிவு, "தலைவரு டபுள் கேம் ஆடறாங்க"

"தி.மு.க.-வுக்குள் ஒரு டைம்பாமை வைத்துவிட்டு சேலத்தில் இருக்கிறார் வீரபாண்டியார். சென்னையில் அது எப்போது வெடிக்கும் என்பதுதான், அவர் உட்பட, யாருக்கும் தெரியவில்லை" என்றார்கள் தி.மு.க. உள்விவகாரம் நன்கு அறிந்தவர்கள். வீரபாண்டியாரின் பேச்சும், அதைத் தொடர்ந்து நடந்தவையும், ஸ்டாலினுக்கும், கருணாநிதிக்கும் இடையே சுமுகமான பேச்சுக்களை கட் பண்ணி விட்டது என்கிறார்கள் அவர்கள்.


கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தந்தைக்கும், மகனுக்கும் பேச்சுவார்த்தை கிடையாது என்பதை உறுதிப் படுத்தினார்கள் அவர்கள். இருவரும் ஆளையாள் பார்த்துக் கொள்வதுகூட இப்போது அறிவாலயம் வரும்போதுதான். கலைஞர் இருக்கும்போது கோபாலபுரம் பக்கமே செல்வதில்லை ஸ்டாலின்.


பொதுக்குழு கூட்டத்தில் அதிரடியாக பேசியதும், அதன்பின் சேலத்தில் இளைஞர் அணிக்கு தாமே ஆட்களை தேர்ந்தெடுத்து லிஸ்ட் தயாரித்ததும் வீரபாண்டியார். அவர்மீது ஸ்டாலினுக்கு கோபம் இருப்பது பாஸிபிள். வீரபாண்டியாரை தூண்டிவிட்டது அழகிரிதான் என்று ஸ்டாலின் நினைத்தால், அழகிரி மீதும் கோபம் கொள்ளலாம். கலைஞர்மீது என்ன கோபம்?


இந்த விவகாரத்தில் கலைஞர் டபுள்-கேம் விளையாடுகிறார் என்று நினைக்கிறாராம் ஸ்டாலின்.


ஸ்டாலினுக்கு நெருக்கமான 'ஆலோசகர்கள்' இருவர் (இதில் ஒருவர் மாவட்டச் செயலாளர்), நடந்தவற்றையெல்லாம் மீண்டும் ஓடவிட்டு, "பாருங்க.. தலைவர் இன்வால்வ்மென்ட் இல்லாம இதெல்லாம் நடக்குமா?" என்று கீ கொடுத்ததில் ஸ்டாலின் முறுகிக் கொண்டு நிற்கிறார் என்று கூறுகிறார்கள்.


பொதுக்குழு கூட்டத்தில் வீரபாண்டியார் பேசியபோது, அங்கே கலைஞரும் இருந்தார். ஸ்டாலினும் இருந்தார். கலாட்டா தொடங்கியபோது, ஸ்டாலின் அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார். கலைஞர் பேசியது வீரபாண்டியாருக்கு சார்பாக என்று எடுத்துக் கொள்ளலாம்.


அடுத்த காட்சியாக வீரபாண்டியார் சேலத்தில் இளைஞர் அணி பட்டியலை தயாரித்து சென்னைக்கு அனுப்பியது எப்போது? ஸ்டாலின் சென்னையில் இல்லாமல் வெளியூரில் (விருதுநகரில்) இருந்தபோது! இதனால் கலைஞரின் நிஜ ரியாக்ஷன் என்ன என்பது ஸ்டாலினுக்கு தெரியாது.


வீரபாண்டியாருக்கு எதிரான அறிக்கை முரசொலியில் வரவேண்டும் என்று ஸ்டாலின் எகிறியதுகூட கலைஞரிடம் அல்ல. கலைஞர் உதவியாளர் சண்முகநாதன் மூலமாகவே அந்த டீலிங் முழுவதும் நடந்தது. முரசொலி அறிவித்தலை கலைஞர் தனது கைப்பட எழுதிக் கொடுத்தார் என்பது உண்மை. ஆனால், அந்த அறிக்கையில் வீரபாண்டியாரின் பெயர் குறிப்பிட்டு குற்றம் சுமத்தப்படவில்லை.


இப்படி ஸ்டெப்-பை-ஸ்டெப்பாக சொல்லிக் கொண்டு போன ஸ்டாலின் ஆலோசகர்கள் இருவரும் ஸ்டாலினிடம், "நீங்களே யோசித்துப் பாருங்க.. கலைஞருக்கும் வீரபாண்டியாருக்கும் எத்தனை ஆண்டு பழக்கம்? கலைஞரின் சிக்னல் கிடைக்காமல் வீரபாண்டியார் சுயமாக இப்படியொரு காரியம் செய்வாரா?" என்றிருக்கிறார்கள்.


சில வருடங்களுக்குமுன் நாமக்கல் பகுதியில் நடைபெற்ற 'சங்கடமான' விவகாரம் ஒன்றை கட்சிக்கு கெட்ட பெயர் வராமல் முடிப்பதற்கு கலைஞரும், வீரபாண்டியாரும் வெளியே மோதுவதுபோல காட்டிக் கொண்டார்கள். ஆனால், நிஜத்தில் இருவரும் சேர்ந்தே அந்த விவகாரத்தை செட்டில் செய்தார்கள். அதே ஆக்ஷன்தான் இங்கும் ரிபீட் ஆகிறதோ என்ற சந்தேகம் ஸ்டாலினுக்கு எழுவது இயல்புதான்.


காரணம், நாமக்கல் விவகாரம் எப்படி முடிவுக்கு வந்தது என்று, ஸ்டாலினுக்கும் நன்றாக தெரியும்.
Thanks to viuviruppu

கழிவறை வசதியை விட, மொபைல் கேட்கும் மகளிரே அதிகம்: அமைச்சர் ஜெய்ராம்

Posted: 17 Feb 2012 02:12 PM PST


 கழிவறை வசதியை விட, மொபைல் கேட்கும் மகளிரே அதிகம்: அமைச்சர் ஜெய்ராம் 

புதுடில்லி: ""பெண்களை பொறுத்தவரை, தங்களுக்கு மொபைல் போன் வேண்டும் என கேட்கின்றனரே தவிர, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென கேட்பதில்லை. நம் நாட்டில் பொது சுகாதாரம் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது,'' என, மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்த நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: பொது சுகாதாரம் என்பது, நம் நாட்டில் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. தற்போது, நமது வாழ்வியல் அணுகுமுறை மாற்றம் குறித்து அதிகம் பேசுகிறோம். அதே நேரத்தில், மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களை பொறுத்தவரை, தங்களுக்கு மொபைல் போன் வேண்டும் என, கேட்கின்றனரே தவிர, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, யாரும் கேட்பதில்லை. இது போன்ற அணுகுமுறை தான், தற்போது நம்மிடையே உள்ளது.


இந்தியா, முரண்பட்ட கருத்துக்களை கொண்ட நாடாக உள்ளது. நம் நாட்டில், 70 கோடிக்கும் அதிகமான மொபைல் போன் சந்தாதாரர்கள் உள்ளனர். ஆனால், பொது சுகாதாரத்தை பொறுத்தவரை, நிலைமை மோசமாக உள்ளது. நாட்டு மக்களில் 60 சதவீதம் பேர், திறந்த வெளி கழிவறைகளைத் தான் பின்பற்றுகின்றனர். கழிவறை வசதி தேவைப்படும் மக்களுக்காக, அரசு சார்பில் கழிவறைகள் அமைத்து தரப்படுகின்றன. அவற்றை யாரும் பயன்படுத்துவது இல்லை. தண்ணீர் பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்த நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பேசினார். பொது சுகாதாரம் தொடர்பாக, பெண்களை குறிப்பிட்டு, மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பழங்குடி பெண்ணுக்கு விருது: மத்திய பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் அனிதா, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். அதே பகுதியைச் சேர்ந்த சிவ்ராம் என்பவருடன், கடந்தாண்டு இவருக்கு திருமணம் நடந்தது. கணவன் வீட்டுக்குச் சென்ற அனிதா, அங்கு கழிவறை வசதி இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கணவன் வீட்டாரிடம் பேசி, கழிவறை வசதியை அமைக்கும்படி வலியுறுத்தினார். அனிதாவின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ஆத்திரம் அடைந்த அனிதா, கழிவறை வசதி இல்லாத வீட்டில் என்னால் வாழ முடியாது எனக் கூறி, திருமணமான இரண்டு நாட்களிலேயே, கணவர் வீட்டை விட்டு வெளியேறினார்.


கணவர் வீடு மட்டுமல்லாது, தன் சொந்த கிராமத்திலும், அனைத்து வீடுகளில் கழிவறை வசதியை ஏற்படுத்த வேண்டும் என, பிரசாரமும் செய்தார். இதை கேள்விப்பட்ட, "சுலப்' சர்வதேச அமைப்பு, அனிதாவின் கிராமத்தில் கழிவறை வசதியை அமைத்து தர, நடவடிக்கை எடுத்தது. "சுலப்' அமைப்பின் தலைவர் பிந்தேஸ்வர் பதக் கூறுகையில், "பொது சுகாதாரத்துக்காக, தன் வாழ்க்கையை பணயம் வைத்த அனிதாவின் துணிச்சலை பாராட்டி, அவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசும், விருதும் கொடுக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் அமைப்பின் விளம்பர தூதுவராகவும் அவரை நியமித்துள்ளோம்' என்றார்.

கூடங்குளம் முட்டுக்கட்டையை போக்க தமிழக அரசு தீவிரம்: விரைவில் அறிக்கை தர உத்தரவு

Posted: 17 Feb 2012 02:08 PM PST


கூடங்குளம் முட்டுக்கட்டையை போக்க தமிழக அரசு தீவிரம்: விரைவில் அறிக்கை தர உத்தரவு

சென்னை: கூடங்குளம் பிரச்னையில் விரைவில் தீர்வு காண்பதில், தமிழக அரசு தீவிரமாக உள்ளது. இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவினர், முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தனர். அறிக்கையை விரைவாகத் தரும்படி, முதல்வர் கேட்டுக் கொண்டதை அடுத்து, இக்குழுவினர் இன்று கூடங்குளம் செல்கின்றனர். கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் சீனிவாசன், இனியன், அறிவொளி, விஜயராகவன் ஆகியோர், அண்ணா பல்கலையில் நேற்று தங்களது முதல் கூட்டத்தை நடத்தினர். இதில், அணு மின் நிலையப் பாதுகாப்பு தொடர்பாக என்னென்ன கூட்டங்களை நடத்துவது, எங்கு செல்வது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 


இதன் பின், இக்குழுவினர் தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். பின்னர், நிருபர்களுக்கு அவர்கள் அளித்த பேட்டி: 
பேராசிரியர் இனியன்: முதல்வரை சந்தித்தோம். எங்களது பணியை நாளை (இன்று) துவக்குகிறோம். முதலாவதாக, கூடங்குளம் சென்று அணு உலை இடம் பெற்றுள்ள இடத்தைப் பார்வையிட உள்ளோம். பின்னர், அங்கு பொது மக்களின் கருத்துக்களை கேட்போம்.


* ஆய்வுப் பணியை எவ்வளவு சீக்கிரம் முடிப்பீர்கள்?
எவ்வளவு சீக்கிரம் என்று சொல்ல முடியாது. எவ்வளவு விரைவில் முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் முடிப்போம்.
* அங்கிருக்கும் மக்களின் அச்சங்களை போக்குவீர்களா?
அது எங்களது வேலை அல்ல. மக்களது கருத்தைக் கேட்டு அறிந்து கொள்வது தான் எங்கள் பணி.
* இப்பணி தொடர்பாக முதல்வர் ஏதேனும் பிரத்யேக அறிவுரை கூறினாரா?
  எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கூறினார்.
* புறக்கணிக்கப்பட்ட மக்களையும் சந்திப்பீர்களா?
குறிப்பாக அவர்களையும் சந்திப்போம்; போராட்டக் குழுவினரையும் சந்திப்போம். அதன் பிறகு, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கூட்டத்தை நடத்தி, மக்களின் கருத்துக்களை கேட்போம். 


அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர் சீனிவாசன்: நாங்கள் முதல்வரை பார்த்தோம். தற்போது இருக்கும் நிலவரம் பற்றி விவாதித்து ஆலோசனை செய்தோம். மத்திய அரசு நியமித்த நிபுணர் குழு, பல சுற்றுபேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. சில கூட்டங்களில் போராட்டக் குழுவின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். அந்த நிபுணர் குழு, நீண்ட விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளால் எழுப்பப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் நிபுணர் குழு ஆய்வை மேற்கொள்ளும். நாளை (இன்று) நெல்லை செல்ல இருக்கிறோம். முதலில் நெல்லை மாவட்ட கலெக்டரையும், அதிகாரிகளையும் சந்திப்போம். அதன் பின், அணு மின் நிலையத்தை ஞாயிறன்று பார்வையிடுவோம். மத்தியக் குழுவின் அறிக்கையின் மீது, போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் கொண்டுள்ள கருத்தைக் கேட்டறிவோம். மேலும், அவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் அதையும் கேட்போம். அதன் விவரத்தை தமிழக அரசுக்கு விரைவில் அளிப்போம். 


* அணு மின் கழிவுகளை எங்கு வைப்பீர்கள் என்று முடிவு செய்யப்பட்டு விட்டதா? கூடங்குளத்தில் அணு உலையின் எந்தக் கழிவையும் வைக்கப் போவதில்லை.


* மறுசுழற்சி மூலம் வெளியேற்றப்படும் அணு மின் கழிவுகளை எங்கு வைப்பீர்கள்? மறுசுழற்சி மூலம் வெளியேற்ற பயன்படும் இயந்திரத்தை கூடங்குளத்தில் வைக்க திட்டமில்லை. அந்த இடத்தை பிறகு முடிவு செய்வோம். 
* மற்ற நிபுணர்களை இதில் சேர்த்து குழு விரிவுபடுத்தப்படுமா? விரிவுபடுத்தப் போவதில்லை. மத்திய நிபுணர் குழுவில் அனைத்து தரப்பு பிரதிநிதித்துவம் கொண்டவர்கள் இடம் பெற்றுள்ளனர். மிகவும் கவனத்துடன் இக்குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
* நீங்கள் அணு உலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை உடையவர் என்று கூறப்படுகிறதே?


எதிர்ப்பாளர்கள் எதிர்ப்பார்கள்; ஆதரவாளர்கள் ஆதரிப்பார்கள். அணு சக்திக்கு நான் ஆதரவாளன் மட்டுமல்ல, இந்தியா எரிசக்தித் துறையில் தன் னிறைவு அடைய வேண்டும் என்பதிலும் விருப்பமுடையவன். கடந்த 55 ஆண்டுகளாக அணு சக்தி துறையில் பணியாற்றி வருகிறேன். எனக்கு இந்தியாவிலும், உலகம் முழுவதும் உள்ள நிலை என்ன என்பது தெரியும். என்னிடம் போதுமான நிபுணத்துவம் இருப்பதாகவும், நான் நடுநிலையுடன் ஆலோசனைகளை வழங்குவேன் என்றும் மாநில அரசு நினைத்து, என்னை குழுவில் நியமித்துள்ளது. எதிர்ப்பாளர்கள் கூடங்குளம் அணு மின் நிலையத்தை மட்டும் மூட வேண்டுமென்று கூறவில்லை. இந்தியா முழுவதும் உள்ள 434 அணு உலைகளையும் மூட வேண்டும் என்று எதிர்க்கின்றனர். இவ்வாறு சீனிவாசன் கூறினார்.
Thanks to dinamalar

ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறேன் - அசின்

Posted: 17 Feb 2012 02:01 PM PST


ஷாருக்கான் ஜோடியாக நடிக்கிறேன் - அசின்

`கஜினி படம் மூலம் இந்திக்கு அறிமுகமானவர் அசின். இதில் அமீர்கான் ஜோடியாக நடித்தார். பின்னர் லண்டன் டிரீம்ஸ் ரெடி படங்களில் சல்மான்கானுடன் ஜோடி சேர்ந்தார். தற்போது போல்பச்சன் ஹவுஸ்புஸ்-2, 2 ஸ்டேட்ஸ் சென்னை எக்ஸ்பிரஸ் படங்களில் நடிக்கிறார். அமீர்கான், சல்மான்கானை தொடர்ந்து ஷாருக்கானுடன் ஜோடியாக நடிக்க விரும்பினார். அதுவும் தற்போது நடந்துள்ளது. இதுகுறித்து அசின் கூறியதாவது:- 


ஷாருக்கான் ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன். ஏற்கனவே அவருடன் நடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு நழுவி போனது. இப்போது நிறைவேறி இருக்கிறது. தற்போது நான் நடிக்கும் போல்பச்சன், ஹவுஸ்புல் 2 படங்களில் மட்டுமே என் முழு கவனமும் உள்ளது. ரன்பீர்கபூருடன் நடிக்க உள்ள "2 ஸ்டேட்ஸ்" படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விரைவில் இப்படம் பற்றிய முழு விவரங்களையும் வெளியிடுவோம் என்றார்.