TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


டாப்ஸி, காஜல் அகர்வால் வரவால் கடுப்பா? - அசின் பதில்

Posted: 24 Mar 2012 04:32 AM PDT


டாப்ஸி, காஜல் அகர்வால் வரவால் கடுப்பா? - அசின் பதில்

டாப்ஸி, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்திக்கு வந்ததால் எனக்கு எந்த கோபமும் இல்லை என்றார் அசின்.


இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், "தமிழிலிருந்து என்னைப் போலவே நிறைய நடிகைகள் இந்திக்கு வருவதாகவும், இதனால் நான் கோபமடைந்திருப்பதாகவும் கூறப்படுவது உண்மையில்லை.யாரும் யாருக்கும் போட்டியாளர்கள் இல்லை. திறமையான நடிப்பைக் காட்டினால் யாரும் எங்கும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும்," என்று கூறியுள்ளார்.


'டர்ட்டி பிக்சர்' படத்தில் வித்யாபாலன் நடித்தது போல் நீங்களும் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, "டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் நடித்ததைப் போல் என்னால் நடிக்க முடியாது. நான் இன்னும் அது போன்ற கேரக்டர்களில் நடிக்கும் அளவிற்கு தயாராகவில்லை," என்றார்.


தமிழில் யாரும் அணுகவில்லையா என்ற கேள்விக்கு, "அதற்கென்ன, நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் நான் இன்னும் பாலிவுட்டில் என்னை நிரூபிக்க வேண்டியுள்ளது. அங்கு செட்டிலான பிறகு தமிழில் நல்ல கதை கிடைத்தால் நடிப்பேன்," என்றார்.
Thanks to OneIndia

இப்போதைக்கு திருமணத்துக்கு பை... சினிமாவுக்கு ஹாய்! - அனன்யா பல்டி

Posted: 24 Mar 2012 04:29 AM PDT


இப்போதைக்கு திருமணத்துக்கு பை... சினிமாவுக்கு ஹாய்! - அனன்யா பல்டி

திருமணம் பற்றி இறுதி முடிவெடுக்கவில்லை. சினிமாவில் பெரிய அளவு சாதிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன், என்று பல்டியடித்துவிட்டார் அனன்யா.
நாடோடிகள் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான கேரள நடிகை அனன்யா, ஒரு பெரிய நடிகையாக வருவார் என எதிர்ப்பார்க்கப்ட்டார். குறிப்பாக அவரது கடைசி படமான எங்கேயும் எப்போதும் நன்றாக ஓடியதால் நிறைய வாய்ப்புகள் அவருக்கு வந்தன.
இந்த நேரத்தில்தான் கேரள தொழில் அதிபர் ஆஞ்சநேயனுடன் அவருக்கு திடீரென திருமணம் முடிவாகி நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடக்கும் என்றும் திருமண தேதியை சீக்கிரம் முடிவு செய்து அறிவிப்போம் என்றும் அனன்யா கூறினார்.
முன்னணி நடிகையாக வளரும்போது அனன்யா திருமணத்துக்கு சம்மதித்தது தமிழ், மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆஞ்சநேயனுக்கு ஏற்கனவே திருமணமானவர் என்ற தகவல் வெளியானது.
இதையடுத்து அனன்யாவின் தந்தை போலீசில் ஆஞ்சநேயன் மீது புகார் அளித்தார். முதல் திருமணத்தை மறைத்து என் மகளை மணக்க முயற்சித்த ஆஞ்சநேயலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முதல் மனைவியை விவகாரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருப்பதாக தெரிவித்தார். அனன்யாவும், இந்த விஷயம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்றும், ஆஞ்சநேயனைத்தான் மணப்பேன் என்றும் உறுதியாக அறிவித்தார். திருமண ஏற்பாடுகளும் நடந்தன.
ஆனால் தற்போது அனன்யா தனது முடிவை மாற்றிக் கொண்டு திருமணத்தை நிறுத்திவிட்டாராம்.மீண்டும் முழு நேரம் சினிமாவில் நடிக்க வேண்டும் என அவர் விரும்புகிறாராம்.திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது, ''திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் அவசரப்பட முடியாது.
சினிமாவில் அதிகம் நடிக்க விரும்புகிறேன். அஜீத், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசையாக இருக்கிறது. சினிமாவில் நிறைய சாதித்த பிறகே எனக்கு திருமணம் நடக்கும்,'' என்றார்.
ஆஞ்சநேயனுடன் அனன்யா திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று அவரது குடும்பத்தினரும் தெரிவித்தனர்.
Thanks to OneIndia

இனி அமெரிக்க கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!

Posted: 24 Mar 2012 04:28 AM PDT


இனி அமெரிக்க கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!

கொழும்பு: இனி அமெரிக்க தயாரிப்பான கோக்கை இலங்கையில் புறக்கணிப்போம் என அரசு ஆதரவுடன் சிங்கள அமைப்புகள் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, நடந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக ஐ.நா.சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதற்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள வெறியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அதிபர் ராஜபக்சேயின் ஆதரவும் உண்டு.
நேற்று தலைநகர் கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், சிங்களர்களும், புத்த மத துறவிகளும் கலந்து கொண்டனர். முன்னதாக கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து புறக்கோட்டை போதிராஜவிகாரை வரை ஊர்வலம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின்போது தேசிய அமைப்பு செயலாளர் பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, ''இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்த பார்க்கிறது. ஐ.நா.மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு அனுமதிக்கக்கூடாது. அமெரிக்காவுக்கு நமது பலத்த எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலமே அதன் ஆதிக்க முயற்சியை தோற்கடிக்க முடியும். எனவே, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை, குறிப்பாக கோக கோலா இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும்'' என்றார். 
ஆர்ப்பாட்டத்தின்போது, அதில் கலந்து கொண்டவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. அதில், அமெரிக்காவின் உற்பத்தி பொருட்களான கோக கோலா, கோதுமை உள்ளிட்டவற்றை வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
Thanks to OneIndia

Vijay tv Ungalil Yaar Adutha Prabhudeva Season 2 25th March 2012 This week Promo video

Posted: 24 Mar 2012 04:25 AM PDT


Vijay tv Ungalil Yaar Adutha Prabhudeva Season 2 25th March 2012 This week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Vijay Tv Neeya Naana 25th March 2012 This week Promo video

Posted: 24 Mar 2012 04:23 AM PDT


Vijay Tv Neeya Naana 25th March 2012 This week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Captain News Afternoon 24-03-2012 1 pm | Captain seithigal 24th March 2012 | Captan Tv Afternoon News

Posted: 24 Mar 2012 04:17 AM PDT


Captain News Afternoon 24-03-2012 1 pm | Captain seithigal 24th March 2012 | Captan Tv Afternoon News

This posting includes an audio/video/photo media file: Download Now

Tamilan TV Shows Thiraivimarsanam - Muppozhudhum Un Karpanaigal Movie Spl Show

Posted: 24 Mar 2012 03:57 AM PDT


Tamilan TV Shows Thiraivimarsanam - Muppozhudhum Un Karpanaigal Movie Spl Show

This posting includes an audio/video/photo media file: Download Now

Tamilan TV News 24-03-2012

Posted: 24 Mar 2012 03:49 AM PDT


Tamilan TV News 24-03-2012

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரிசாவில் எம்.எல்.ஏ.வை கடத்திய மாவோயிஸ்டுகள்!

Posted: 23 Mar 2012 10:57 PM PDT


ஒரிசாவில் எம்.எல்.ஏ.வை கடத்திய மாவோயிஸ்டுகள்!

கோராபுட்: ஒரிசாவில் ஆளும் பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ. ஒருவரை, மாவோயிஸ்டுகள் இன்று கடத்திச் சென்றதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கோராபுட் மாவட்டம் லஷ்மிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வான ஜினா ஹிகாகா கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று இரவு கலந்து கொண்டார். அதன் பின்னர் இரவு 9.15 மணியளவில் கோரபுட் எம்.எல்.ஏ. ரகுராமுடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அங்கிருந்து புறப்பட்டு செமிலிகுடா என்ற இடத்தில் இரவு உணவு அருந்திவிட்டு லக்ஷ்மிபூர் சென்று கொண்டிருந்தார்.


அப்போது டோயபுட் என்ற கிராமத்தில் முகாமிட்டிருந்த 100 மாவோயிஸ்டுகள் எம்.எல்.ஏ. சென்ற வாகனத்தை திடீர் என வழிமறித்துள்ளனர். பாதுகாவலரையும், ஓட்டுநரையும் தப்பிச்செல்ல அனுமதித்துவிட்டு, எம்.எல்.ஏ.வை மட்டும் அவர்கள் கடத்திச் சென்றதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது.


கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வை மீட்பதற்கு ஒரிசா காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.


கடத்திச் செல்லப்பட்டுள்ள ஜினா ஹிகாகா, கோயா என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். கோயா பழங்குடி இனத்தில் படித்த ஒரே ஒருவர் ஜினா ஹிகாகா மட்டுமே.


சில நாட்களுக்கு முன்பு கோரபுட் மாவட்டம் ஹரிபுட் என்ற இடத்தில் காவல்துறை அதிகாரி ஒருவரை சந்தை பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர்.


ஏற்கெனவே இத்தாலி நாட்டைச் சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகளை கந்தமால்- கஞ்சம் மாவட்டங்களின் எல்லையில் மாவோயிஸ்டுகள் முன்பு கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை கடத்தியுள்ளதால் அம்மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Thanks to OneIndia

Thirumathi Selvam This week Promo video

Posted: 23 Mar 2012 10:47 PM PDT

Thirumathi Selvam This week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Thendral This week Promo video

Posted: 23 Mar 2012 10:46 PM PDT


Thendral This week Promo video



This posting includes an audio/video/photo media file: Download Now

Azhagi This week Promo video

Posted: 23 Mar 2012 10:46 PM PDT


Azhagi This week Promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

Nadaswaram This week promo video

Posted: 23 Mar 2012 10:43 PM PDT


Nadaswaram This week promo video

This posting includes an audio/video/photo media file: Download Now

சினேகாவின் காதல் ரகசியங்கள்!

Posted: 23 Mar 2012 10:31 PM PDT


சினேகாவின் காதல் ரகசியங்கள்!

ஷார்ப் ஹேர் கட், புன்னகைக்கும் கண்கள், சிரிக்க மறக்காத உதடுகள்... மாப்பிள்ளைக் களை இப்போதே மிளிர்கிறது பிரசன்னாவிடம்!  
 ''அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!'' சொல்லி ஆரம்பித்த உரையாடலில் இருந்து இங்கே கொஞ்சம்...
''எல்லாரும் சினேகா மாதிரி பொண்ணு வேணும்னு தேடிட்டு இருக்கும் சீஸனில், சினேகாவே உங்களுக்குக் காதலியா... சீக்கிரமே மனைவியா வரப்போறாங்க... எவ்ளோ பேர் பொறாமையைச் சம்பாதிச்சிருக்கீங்க தெரியுமா?''
''எங்கே போனாலும் பெண்கள் ஆசையா ஆசீர்வதிக்கிறாங்க... வாழ்த்துறாங்க. ஆனா, இந்தப் பசங்க...  'முந்திக்கிட்டீங்க பாஸ். நான்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். தலைவா, கண் கலங்காமப் பார்த்துக்கோ'னு அன்பா, கோபமா ஃபேஸ்புக், ட்விட்டர்ல கமென்ட்ஸ் விழுகுது. சிலர் 'பூ மாதிரிவெச்சுப் பார்த்துக்கங்க மாப்பிள்ளை. பொண்ணு ஏதாவது கண் கலங்கிச்சுனு கேள்விப்பட்டேன்... மவனே! உன்னை ஒரு வழி பண்ணிடுவேன்'னு செல்ல மிரட்டல் வேற. ரொம்ப சந்தோஷமா இருக்கு!''


''சினேகாகிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் என்ன?''
''மனசுல ஒண்ணை வெச்சுக்கிட்டு வெளியே வேற விதமா அவங்களுக்குப் பேசத் தெரியாது. எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசிடுவாங்க. அவங்களைச் சந்தோஷப்படுத்துவோமேனு சின்ன பொய் சொன்னாக்கூட அவங்க ளுக்குப் பிடிக்காது. 'கஷ்டமா இருந்தாலும் உண்மையே சொல்லிடு'னு சொல்வாங்க. ரொம்பவும் உறுதியான பொண்ணு. நானே சமயங்களில் திகைச்சு நிக்கும்போது, அவங்க சொல்ற அட்வைஸ்தான் எனக்குக் கை கொடுக்கும்!''
''ரெண்டு பேரும் என்னல்லாம் எஸ்.எம்.எஸ். அனுப்புச்சுக்குவீங்க?''
''எப்படியும் ஒரு மணிக்கு ஒரு தடவை பேசிக்குவோம். எப்பல்லாம் பேச முடிய லையோ... அப்பல்லாம் மெசேஜ் பறக்கும். நான் அடிக்கடி அனுப்புறது 'ஐ லவ் யூ' (i luv u). அவங்க அடிக்கடி அனுப்புறது யூ மின் தி வேர்ல்டு டு மீ (you mean the world to me). ஏதோ வேலையில் சில மணி நேரம் அவங்களை விசாரிக்க மறந்துட்டா, 'ஸாரி' மெசேஜ் அனுப்பிச் சமாதானப்படுத்தின பிறகுதான் பேச்சுவார்த்தை ஆரம் பிக்கும்.
ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் ஃப்ளைட்ல போறப்பதான் ரொம்ப கஷ்டமா இருக்கும். 'இன்னும் நாலு மணி நேரம் எஸ்.எம்.எஸ். அனுப்ப/ரிசீவ் பண்ண முடி யாதே'னு கஷ்டமா இருக்கும். ஃப்ளைட்ல இருந்து இறங்கின உடனே இன்பாக்ஸ் கொள் ளாத அளவு மெசேஜ் கொட்டும். ஃப்ளைட்ல ஏறி உக்காந்ததும் போக வேண்டிய இடம் உடனே வந்துட்டா எவ்வளவு நல்லா இருக் கும்கிற கற்பனையில் ஆரம்பிச்சு, 'எ விஷ் டு ஷ்ரிங்க் தி டைம் சோன்'ங்கிற (A wish to shrink the time zone) ஒரு வரிக் கவிதை வரை மேடம் புகுந்து விளையாடுவாங்க. மத்தபடி மிஸ் யூடா, ஐ லவ் யூ, டார்லிங், செல்லம், க்யூட்டினு எல்லா ஸ்வீட் நத்திங்ஸும் எங்க காதலிலும் உண்டு!''
''என்னலாம் செல்லப் பேர் வெச்சுக் கூப்பிட்டுக்குவீங்க?''
''நான் கணக்கு வழக்கு இல்லாம வெச்சிருக்கேன். பாரதியாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, அதிகமா 'கண்ணம்மா'னு கூப்பிடுவேன். அது போக பப்பு, பேபு, பச்சுனு மூடுக்கு ஏத்த மாதிரி கூப்பிடுவேன். அவங்க என்னை கண்ணா, டாடான்னு கூப்பிடுவாங்க. செல்போன்ல 'பச்சு'னு அவங்க நம்பரை சேவ் பண்ணிஇருக்கேன். அவங்க மொபைல்ல நான் 'டாடா'!''
''சண்டை போட்டுப்பீங்களா?''
''செல்லமா நிறைய... கோபமா கொஞ்சம். ஆனா, எதுவா இருந்தாலும் அரை மணி நேரம்கூட நீடிக்காது. அவங்க கவனிப்புக்கு நான் நேரம் ஒதுக்கலைன்னாதான், மேடம் கோபப்படுவாங்க. ஆனா, அதுக்கு நேரம் ஒதுக்காம இருக்க முடியுமா?''


''ரெண்டு பேர் நடிச்ச படங்களில் பரஸ்பரம் பிடிச்ச படம் என்ன?''
''எனக்கு அவங்க நடிச்சதில் 'விரும்புகிறேன்', 'பார்த்திபன் கனவு', 'வசூல் ராஜா', 'பிரிவோம் சந்திப்போம்' படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவங்களுக்கு 'அழகிய தீயே', 'கண்ட நாள் முதல்', 'அஞ்சாதே', 'முரண்' பிடிக்கும். 'அஞ்சாதே' படத்தில் நான் வில்லனா நடிச்சது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. படத்தில் நான் ஒரு பெண்ணைப் பலாத்காரம் பண்ணுவேன். க்ளைமாக்ஸ்ல ஒரு பொண்ணு என்னை செருப்பால அடிக்கும். அதை எல்லாம் அவங்க சினிமாவாப் பார்த்துதான் ரசிச்சாங்க. ஆனா, படத்தில் நான் செத்துப்போறது மட்டும் அவங்களுக்குப் பிடிக்கலை. என் அம்மா மாதிரியே அந்த சீனைப் பார்க்க முடியாமக் கஷ்டப்பட்டாங்க. 'நீங்க படத்தில் செத்திருக்க வேண்டாம்'னு ஃபீல் பண்ணாங்க!''
''உங்க அம்மாவுக்கு அவங்க மருமககிட்ட என்ன பிடிச்சிருக்கு?''
''சினேகாவை என் அம்மா 'சுஹா'னுதான் கூப்பிடுவாங்க. சுஹாசினிதானே அவங்க நிஜப் பேரு. அம்மாவுக்கு முன்னா டியே சினேகாவோட சிரிப்பு ரொம்பப்  பிடிக்கும். நேர்ல பார்த்ததும் அதுஇன்னும் பிடிச்சிருச்சு. 'பெரியவங்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்குதுடா'னு சொல்லிச் சொல்லி ஆச்சர்யப்படுறாங்க. மருமகளை அவங்க கையில இல்லை... மனசுல வெச்சுத் தாங்குறாங்க!''
''ஹனிமூன் எங்கே?''
''ஸ்காட்லாந்து, பாரீஸ், நியூஸிலாந்து, பாஸ்னியானு நாலு நாடுகள் சாய்ஸில் இருக்கு. மேடம் எங்கேனு டிக் அடிக்கிறாங்களோ... அங்கே பறக்க வேண்டியதுதான்!''
Thanks to Vikatan


குஷ்பு கொடுத்த முத்தம்!

Posted: 23 Mar 2012 10:27 PM PDT


குஷ்பு கொடுத்த முத்தம்!

ஹன்சிகா மோத்வானி... பட்டர் ஸ்காட்ச் கன்னம்... ஊட்டி ரோஸ் வண்ணம்... பாதாம் பால் பளிங்கு தேவதை... சிம்பிளாக 'சின்ன' குஷ்பு!  
 ''எப்படி இவ்வளவு பளீர்னு இருக்கீங்க?''
''என் நிறம் சிந்திப் பெண்களுக்கே உரியது! அம்மா சீமா டெர்மடாலஜிஸ்ட். சரும மருத்துவர். இது போதாதா? நம்புவீங் களா? கடலை மாவு மாதிரி இயற்கையான பொருட்களைத்தான் சின்ன வயசுல இருந்தே உபயோகிப்பேன். அதான் என் ஸ்கின் செம பாலீஷா இருக்கு!''
''அழகா இருக்கீங்க சரி... ஆனா, நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கிற பவர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் இல்லையே உங்ககிட்ட?''
''நம்பர் ஒன் பத்திலாம் நான் யோசிக்கவே இல்லை. 2003-ல இந்தியில் குழந்தை நட்சத்திரமா நடிச்சு, நாலே வருஷத்தில் தெலுங்கில் ஹீரோயினா அறிமுகமான 'தேசமுத்ரு' படம் ஆந்திராவில் சூப்பர் டூப்பர் ஹிட். அப்போ சிறந்த புதுமுக நடிகைக்கான விருது கிடைச்ச சந்தோஷமே இன்னும் எனக்குக் குறையலை. அதுக்குள்ள நம்பர் ஒன், டூன்னு என்கிட்ட கேட்குறீங்களே. ஆனா, தமிழ் சினிமா மேல எனக்கு ரொம்ப மரியாதை உண்டு. அதனால தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். நிறைய வாய்ப்பு வந்தாலும், இப்போலாம் ரொம்ப செலெக்டிவா கதை கேட்டுத் தான் ஓ.கே. சொல்றேன். இப்போ நான் நடிச்சு வெளிவரப் போற 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் பார்த்துட்டுச் சொல் லுங்க என் பெர்ஃபார்மன்ஸ்பத்தி. 'ஓ.கே. ஓ.கே'-வுக்குப் பிறகு 'ஹன்சிகா டபுள் ஓ.கே.'னு நீங்களே சொல்வீங்க பாருங்க!''


''தமிழ் சினிமாவில் யார் உங்க ஃபேவரைட் ஹீரோயின்?''
''எப்பவும் என் ஃபேவரைட் குஷ்பு மேம்தான். என்ன ஒரு அழகு! ஒரு தடவை நாங்க மீட் பண்ணப்போ, என்னைக் கட்டிப்பிடிச்சு முத்தம் வெச்சாங்க.அவங்க எனர்ஜி லெவல் எனக்கு ரொம்பப் பிடிக் கும். அரசியல், டி.வி., சினிமா, குடும்பம்னு பறந்துட்டே இருப்பாங்க. கோர்ட், கேஸ்னு பிரச்னை வந்தாக்கூட சட்டப்படி போல்டா சமாளிப்பாங்க. இது எல்லாத்துக்கும் மேல எப்பவும் சிரிச்சுட்டே இருப்பாங்க. என்னை எல்லாரும் 'சின்ன குஷ்பு'னு சொல்றாங்க. என் கேரியரும் அவங்களை மாதிரியே இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனா, எனக்கு கோயில்லாம் கட்ட வேணாம். சின்னதா ரசிகர்கள் மனசுல இடம் கொடுத்து, ஏதோ ஒரு ஊர் சொன்னாங் களே.... மீனாட்சி சாமிகூட இருக்குமே... ஆங்... மதுரை! அங்கே எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சா போதும்!''
Thanks to Vikatan

கஹானி.. கர்ப்பிணி.. கொட்டும் வாய்ப்பு!

Posted: 23 Mar 2012 10:24 PM PDT


கஹானி.. கர்ப்பிணி.. கொட்டும் வாய்ப்பு!

இந்தி திரையுலகின் லேடி கான் என்று வர்ணிக்கப்படுபவர் வித்யா பாலன்.


'தி டர்ட்டி பிக்சர்' படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை வென்றார். அவ்விருது அறிவிக்கப்பட்ட சில நாட்களில் வெளியான படம் 'கஹானி'.


நிறைமாத கர்ப்பிணி பெண் தொலைந்து போன கணவனை தேடி இந்தியா வருவது போல திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.


வித்யா பாலன் தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆவதும், பின்னர் விலகுவதுமாக இருந்து வந்தது.  தற்போது தேசிய விருது,  'கஹானி' படத்தின் பிரம்மாண்ட வரவேற்பு ஆகியவையின் பலனாக,  தமிழ் திரையுலகினர் தற்போது வித்யா பாலனை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.


முன்னணி நட்சத்திரங்களும் வித்யா பாலனை வித்யா பாலனை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சிக்கிறார்களாம்.  ஆனால், இப்போதைக்கு வித்யா பாலனின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிவதால், இந்தி பட மார்கெட்டிலிருந்து பிராந்திய மொழி திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்பது தெரியவில்லை. 


இது போக, பெரும் தொகை கொடுத்து விளம்பரங்களில் நடிக்க வைக்க, வித்யா பாலனை மொய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். 


'கொசுறு' கபாலி : " 'கஹானி' படத்தோட டிவி ரைட்ஸ் செம்ம விலைக்கு போயிருக்காம்.. ஷாருக்கான், சல்மான்கான் படங்களுக்கு சமமா சுமார் 8 கோடிக்கு வாங்கியிருக்காங்க.! "
Thanks to Vikatan

ஓகே ஓகே - 450 பிரின்ட்!

Posted: 23 Mar 2012 10:22 PM PDT


ஓகே ஓகே - 450 பிரின்ட்!

இயக்குனர் ராஜேஷ் - சந்தானம் கூட்டணியில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'.


உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. டிரெய்லரில் உதயநிதி - சந்தானம் கூட்டணியின் காமெடி காக்டெய்லால் இளைஞர்கள் இப்படத்தின் வெளியீட்டு தேதி எப்போது என்று ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.பெரிய நாயகர்களின் படத்தினை போலவே 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்கும் சுமார் 450 பிரின்ட்கள் போடப்படுகிறது.


உதயநிதி ஸ்டாலின் " அனைத்துக்கும் காரணம் இயக்குனர் ராஜேஷ் தான். ரொமான்டிக் காமெடி படங்களில் அவர் மன்னன்.  சென்சார் அதிகாரிகள் இப்படத்தினை பார்த்துவிட்டு, சமீபகாலங்களில் இது போன்ற காமெடி படத்தினை பார்த்தது இல்லை என்று பாராட்டி, ' யு ' சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள் " என்று கூறியிருக்கிறார்.அனைவரையும் சிரிப்பு மழையில் நனைய வைக்க விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
'கொசுறு' கபாலி : " 'கொலவெறி' யோட ரிலீஸ் ஆகப் போற தனுஷ் படத்துக்கு 400 பிரின்ட் தான் 
Thanks to Vikatan

நடிகை அல்போன்சா முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீட்டு மனு!

Posted: 23 Mar 2012 10:20 PM PDT


நடிகை அல்போன்சா முன்ஜாமீன் கேட்டு மேல்முறையீட்டு மனு!

சென்னை: காதலன் வினோத்குமார் மர்மச் சாவு தொடர்பான வழக்கில் தனக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் கவர்ச்சி நடிகை அல்போன்சா.


சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரேயுள்ள சியாமளா கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை அல்போன்சா (வயது 32) வசிக்கிறார். 


இவரது நண்பர் நடிகர் வினோத்குமார். இவர் அல்போன்சா வீட்டில் தங்கி இருந்தார். சமீபத்தில் அல்போன்சா வீட்டில் வினோத்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.


இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வினோத்குமார் மர்மசாவு வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யக் கூடும் என்று சந்தேகிப்பதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அல்போன்சா மற்றும் அவரது சகோதரர் மனுதாக்கல் செய்தனர்.


இந்த வழக்கு விசாரணை ஆரம்பகட்ட நிலையில் இருப்பதால் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி, 2 பேரின் மனுவையும் நீதிபதி பொன்.கலையரசன் தள்ளுபடி செய்தார். அதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அல்போன்சா மனு தாக்கல் செய்துள்ளார்.


தான் நடித்த சினிமா படம் சம்பந்தமாக மன உளைச்சலில் இருந்த வினோத்குமார் தற்கொலைதான் செய்துள்ளார், அவரது சாவுக்கு நான் எந்த வகையிலும் காரணமல்ல என்று அதில் அல்போன்சா தெரிவித்துள்ளார்.


எனவே குற்றமற்ற தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அதில் அல்போன்சா கோரியிருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Thanks to OneIndia

Dinkaran E-paper 24-03-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 24th March 2012

Posted: 23 Mar 2012 10:09 PM PDT


Dinkaran E-paper 24-03-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 24th March 2012

Download Link

Nakeeran 24-03-2012 | Free Download Nakkeeran PDF This week | Nakkheeeran 24th March 2012 Ebook

Posted: 23 Mar 2012 10:15 PM PDT


Nakeeran 24-03-2012 | Free Download Nakkeeran PDF This week | Nakkheeeran 24th March 2012 Ebook

Download Link

http://adf.ly/6afRW
http://adf.ly/6afSp

Junior Vikatan 28-03-2012 | Free Download Junior Vikatan PDF This week | Junior Vikatan 28th March 2012 ebook

Posted: 23 Mar 2012 09:43 PM PDT


Junior Vikatan 28-03-2012 | Free Download Junior Vikatan PDF This week | Junior Vikatan 28th March 2012 ebook

Download Link

எளிதில் விவாகரத்து பெற விரைவில் புதிய சட்டம் அமல்?

Posted: 23 Mar 2012 02:14 PM PDT


எளிதில் விவாகரத்து பெற விரைவில் புதிய சட்டம் அமல்?

புதுடில்லி : பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெறும் வகையில், புதிய சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது. இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.


திருமண சட்டத்திருத்த மசோதா, கடந்த 2010ல், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த மசோதா சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதை பரிசீலித்த நிலைக் குழு, இந்த மசோதாவில் நான்கு திருத்தங்களை செய்யும்படி பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஏற்ப, மசோதாவை மாற்றி அமைக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிரிந்த தம்பதியர் பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் 18 மாதங்கள் வரை, அவர்கள் விவாகரத்து பெற காத்திருக்க வேண்டும். இனி அந்த நிலைமை இருக்காது. "


இனி சேர்ந்து வாழவே முடியாத திருமணம்' என்ற புதிய விதிமுறை, சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், பிரிந்தவர்கள் விரைவில் விவாகரத்து பெற்று விட முடியும். அவர்கள் இனி ஒன்று சேர முடியாது என, கோர்ட் தீர்மானித்தால், உடனடியாக விவாகரத்து வழங்கலாம். இதன் மூலம், ஆறு மாதம் முதல் 18 மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தால், உடனே கிடைக்கும்.இதே போல, "சேரவே முடியாது' என்ற புதிய பிரிவின்படி, கணவன் விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க, மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், மனைவி இதே காரணத்திற்காக விவாகரத்து கோரும் போது, அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லை.
Thanks to Dinamalar

பிரபாகரன் போராட்டம் சரியானதே.. ஆனால் சகோதர சண்டைதான் ஈழம் அமைவதைக் கெடுத்தது - கருணாநிதி

Posted: 23 Mar 2012 02:11 PM PDT


பிரபாகரன் போராட்டம் சரியானதே.. ஆனால் சகோதர சண்டைதான் ஈழம் அமைவதைக் கெடுத்தது - கருணாநிதி

சென்னை: தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டைதான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி, தமிழ் ஈழம் பற்றியதுதான். அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:


ஈழத்தில் நடந்த சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து என்றார் கருணாநிதி.


அப்போது, புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்தன. அதனால்தான் நாங்கள் போராடத் தொடங்கினோம்' என்று பிரபாகரன் சொல்லியிருந்தாரே?அது தவறா? என்று ஒரு நிருபர் கேட்டார்.


உடனே பதிலளித்த கருணாநிதி: "பிரபாகரன் போராட்டத்தைக் குறை கூறும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. அவர் முன்னெடுத்த போராட்டம் சரியானதே. அதை திமுகவும் ஆதரிக்காமலில்லை. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான் சொன்னது அவர்களைப் பற்றி மட்டுமே அல்ல.


ஆனால் பிரபாகரனும் முகுந்தனும், பத்நாபாவும், ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண்டு அதில் ரத்த ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த வேதனையோடு அப்போதும் தடுத்தேன். இப்போதும் அந்த நிலை வரக்கூடாது," என்று வேண்டுகிறேன்.
Thanks to OneIndia

ஹன்சிகாவின் 'பேச்சு'லர் கவர்ச்சி கொண்டாடும் கோடம்பாக்கம்

Posted: 23 Mar 2012 02:09 PM PDT


ஹன்சிகாவின் 'பேச்சு'லர் கவர்ச்சி கொண்டாடும் கோடம்பாக்கம்

நடிக்க வந்த கொஞ்ச நாட்களில் பதினைந்து படங்களில் நடித்து முடித்துவிட்டாராம் ஹன்சிகா மோத்வானி. இந்த எண்ணிக்கை தமிழ் படங்களுடன் மற்ற மொழி படங்களையும் சேர்த்துதான்.


சொன்ன நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவது. சின்ன சின்ன சிரமங்களையும் பொறுத்துக் கொள்வது என்று ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் தனது பொறுமையால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஹன்சிகாவின் இன்னொரு குவாலிடி படம் தொடர்பான எல்லா ஃபங்ஷன்களுக்கும் வந்து விடுவதுதான்.
தனது படத்தின் துவக்க விழாவுக்கு வருவதற்கோ, ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வருவதற்கு அநியாயத்துக்கு பிலிம் காட்டும் நடிகைகளும் இங்குதான் இருக்கிறார்கள். அதனால்தான் ஹன்சிகாவின் இந்த குட் குவாலிடிஸ் கோடம்பாக்கத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.


சமீபத்தில் கூட முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தின் பிரஸ்மீட்டில் அலட்டோ அலட்டென்று அமலாபால் அலட்டியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவரையெல்லாம் ஒப்பிடும்போது ஹன்சிகா கிரேட் என்கிறார்கள்.
தமிழே தெரியாவிட்டாலும் தெரிந்ததை போல அவர் சமாளிப்பதுதான் இன்னும் கவர்ச்சி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஒருவேளை இதுதான் 'பேச்சு'லர் கவர்ச்சியோ என்னவோ?
Thanks to Tamilcinema

ஏ- வை நோக்கி பில்லா 2 அஜீத் பட வியாபாரத்தில் இழுபறி

Posted: 23 Mar 2012 02:06 PM PDT


ஏ- வை நோக்கி பில்லா 2 அஜீத் பட வியாபாரத்தில் இழுபறி

எப்பவுமே மே 1 ந் தேதியான தனது பிறந்த நாளில் தன்னோட படங்களை ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டும் அஜீத்துக்கு, இந்த முறை அந்த ஆசை கை கூடாது போலிருக்கிறது. வேக வேகமாக பில்லா-2ஐ உருவாக்கிக் கொண்டிருந்தாலும் மே இறுதியில்தான் படத்தை வெளியிட முடியுமாம்.


ரிலீஸ் எப்ப வேணா ஆகட்டும். படத்தை இப்ப கொடுத்திருங்க என்று கால்கடுக்க காத்திருக்கும் ஹோல்சேல் விநியோகஸ்தர்களில் அதிகமுக்கியமானவராக கருதப்படுகிறார் பாரிவேந்தர். சினிமாவுக்குள் 'புதிய தலைமுறை'யாக அடியெடுத்து வைத்திருக்கும் இவரை குபேர மூலையாக நினைத்து கும்பிட ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்.


அப்படிப்பட்டவருக்கு பில்லாவை கொடுக்க சம்மதித்த தயாரிப்பு தரப்பு பெரும் விலை சொல்கிறதாம். அதற்கும் தயாராகிவிட்டார் வேந்தர். ஆனால் ஒரு சிக்கல். படத்தின் கான்சப்ட் மற்றும் சண்டை காட்சிகளை கருத்தில் கொண்டால் நிச்சயம் ஏ தான் கிடைக்குமாம். ஏ சர்டிபிகேட் படங்களுக்கு 30 சதவீத வரியை தனியாக செலுத்த வேண்டும். இந்த வரிக்காகவாவது விலையை குறைச்சுக்க கூடாதா என்கிறார்களாம் வேந்தர் தரப்பில்.
Thanks to Tamilcinema