TV SHOWS | MOVIES | TV SERIALS

TV SHOWS | MOVIES | TV SERIALS


தங்கக் காசு கொள்ளை... அத்தனையும் 'பக்கா ட்ராமா' - ஒரே நாளில் கண்டுபிடித்து அசத்திய போலீஸ்!

Posted: 06 Apr 2012 10:58 PM PDT


தங்கக் காசு கொள்ளை... அத்தனையும் 'பக்கா ட்ராமா' - ஒரே நாளில் கண்டுபிடித்து அசத்திய போலீஸ்!

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தங்ககாசு கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் நடந்தது அனைத்தும் அந்த நிறுவன ஊழியர் மற்றும் அவர் நண்பர்களின் 'பக்கா நாடகம்' என்பதை சென்னை போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்து, தங்கக் காசுகளை மீட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக இணை கமிஷனர் சங்கர் நேற்று மாலை 6.30 மணி அளவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:


சென்னை கோயம்பேட்டில் புதன்கிழமை நள்ளிரவில் ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட 2.5 கிலோ எடையுள்ள தங்ககாசுகள் கொள்ளை போய்விட்டதாக ஒரு புகார் கொடுக்கப்பட்டது. முத்தூட் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணிபுரியும் செந்தில்குமார், ராமநாதன் ஆகிய இருவர் இந்த புகாரை தெரிவித்தனர்.
செந்தில்குமார் கோவை முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் தங்ககாசு விற்பனை பிரிவு நிர்வாகியாக வேலை பார்ப்பவர். ராமநாதன் பொள்ளாச்சி முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பவர்.
முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனம் தங்க காசுகளை தவணை முறையில் பணம் வாங்கி விற்பனை செய்யும் திட்டத்தை நடத்தி வருகிறது. இதற்கான தங்க காசுகளை பெங்களூரில் தயார் செய்து, சென்னை சூளைமேட்டில் உள்ள முத்தூட் நிறுவனத்தில் குவித்து வைத்திருப்பார்கள். இங்கிருந்து தங்க காசுகளை செந்தில்குமார் தமிழகம் முழுவதும் கொண்டு சென்று அனைத்து கிளைகளுக்கும் சப்ளை செய்வார்.


கொள்ளை புகார்...


இவ்வாறு 7 கிலோ தங்க காசுகளை கோவை முத்தூட் நிறுவன கிளைக்கு கொண்டு செல்லும்போது அவை கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. செந்தில்குமாரும், ராமநாதனும் 7 கிலோ தங்ககாசுகளையும் 3 பைகளில் போட்டு ஆட்டோவில் எடுத்து வந்ததாகவும், ஆட்டோவை வழியில் நிறுத்தி டிரைவரின் நண்பர் ஒருவர் ஏறியதாகவும், பின்னர் ஆட்டோ கோயம்பேடு மார்க்கெட் செல்லும் வழியில் இருட்டான பகுதியில் வைத்து, ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும், தாங்கள் கொண்டு சென்ற தங்ககாசுகளில் ஒரு பையில் இருந்த 2.5 கிலோ தங்ககாசுகளை கொள்ளை அடித்தாகவும் புகாரில் கூறி இருந்தனர்.
கொள்ளையர்கள் கத்தியால் தனது கையில் குத்தி விட்டதாகவும் செந்தில்குமார் தெரிவித்தார். அவரது இடது கையில் ரத்தகாயமும் இருந்தது. கொள்ளையர்கள் தனது கழுத்தில் கிடந்த தங்க செயினையும், செல்போனையும் கூட பறித்து சென்று விட்டதாக மேலும் செந்தில்குமார் தெரிவித்தார். கொள்ளையர்கள் தப்பிச் செல்லும்போது மிளகாய் பொடியை கண்களில் தூவினார்கள் என்றும், செந்தில்குமாரும், ராமநாதனும் சொன்னார்கள்.


7 தனிப்படை


இந்த சம்பவம் தொடர்பாக புகார் வந்தவுடன் உடனடியாக நான், துணை கமிஷனர் கார்த்திகேயன், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கலிதீர்த்தான் ஆகியோருடன் நேரில் சென்று விசாரணை நடத்தினேன்.
கோயம்பேடு போலீசில் கொள்ளை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆட்டோவில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அனந்தராமன், சம்பத்,சுப்பிரமணியன், குமாரவேலு, பாஸ்கர்,சேகர்பாபு, விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினோம்.
உண்மையிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் நடந்து விட்டது என்றுதான் தீவிரமாக விசாரித்தோம். ஆனால் செந்தில்குமாரும், ராமநாதனும் சொன்ன தகவல்கள் முரண்பட்டதாக இருந்தது. செந்தில்குமார் யார், யாரிடம் செல்போனில் பேசினான் என்ற தகவல்களை சேகரித்தபோது, அவர் சூளைமேட்டைச் சேர்ந்த அப்பாதுரை என்பவரோடு அதிக தடவை பேசி இருப்பது தெரியவந்தது.


அப்பாதுரை கைது


முதலில் அப்பாதுரையைப் பிடித்தோம். அவர் ஒரு ஆட்டோ டிரைவர். அவரை விசாரித்தபோது, ராமநாதன் இவர்தான் நாங்கள் சென்ற ஆட்டோவை ஓட்டினார். அவர்தான் கொள்ளையர்களில் ஒருவர் என்றும் சொன்னார். மேலும் அவரது ஆட்டோவில் 5 சாமிபடங்கள் இருந்தன. அதை வைத்து அப்பாதுரையின் ஆட்டோதான், கொள்ளை ஆட்டோ என்பதையும் ராமநாதன் உறுதிபடுத்தினார்.
ஆனால் அப்பாதுரை தனக்கு அதில் சம்பந்தம் இல்லை என்று மறுத்தார். செந்தில்குமாரும், அப்பாதுரை ஆட்டோ டிரைவர் இல்லை என்றும், அவரது ஆட்டோவும் கொள்ளை ஆட்டோ இல்லை என்றும் மறுத்தார். இதில்தான் எங்களுக்கு முதலில் செந்தில்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர் ஏன் குற்றவாளியை இல்லை என்று மறுக்கிறார் என்று நினைத்தோம்.


நாடகம் அம்பலம்


அதன்பிறகு ராமநாதனை தனியாக விசாரித்தபோது, செந்தில்குமார் பொய் சொல்வது தெரிந்தது. பின்னர் தீவிரமாக விசாரித்தபோது செந்தில்குமார் தான்தான் குற்றவாளி என்பதை உறுதிபடுத்தி ஒப்புக்கொண்டு விட்டார். உடனடியாக அவரும், அப்பாதுரையும் கைது செய்யப்பட்டனர். அடுத்து ஆட்டோவில் மறித்து இடையில் ஏறிய ராஜு என்பவரையும் கைது செய்தோம். அவரும் ஆட்டோ ஓட்டுபவர்தான்.


அப்பாதுரையும், ராஜுவும் செந்தில்குமாரின் நண்பர்கள். 3 மாதங்களாக திட்டமிட்டு இந்த கொள்ளை நாடக சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். கொள்ளை உண்மையிலேயே நடந்தது என்று போலீசார் நம்பவேண்டும் என்பதற்காக, செந்தில்குமாரை, ராஜு கத்தியால் குத்தி இருக்கிறார். மிளகாய் பொடியையும் தூவி இருக்கிறார்கள்.


3.8 கிலோ தங்ககாசு மோசடி


இந்த கொள்ளையில் ராமநாதனுக்கு பங்கு இல்லை. அவர் அப்பாவி என்பதால் அவரை விட்டு, விட்டோம். இந்த கொள்ளை நாடகத்தின் கதாநாயகன் செந்தில்குமார்தான். அவர் அடிக்கடி கொண்டு செல்லும் தங்ககாசுகளில் இருந்து, 3.8 கிலோ தங்க காசுகளை திருடி இருக்கிறார்.
அதை நிர்வாகத்தினர் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவும், திருடிய தங்க காசுகளை இந்த கொள்ளை மூலம் சரிகட்டவும் செந்தில்குமார் திட்டம் போட்டு இருக்கிறார். அவரது கொள்ளை நாடகத்தில் தனது நண்பர்கள் அப்பாதுரையையும், ராஜுவையும் மிகவும் தத்ரூபமாக நடிக்க வைத்துள்ளார்.


24 மணி நேரத்தில்


கொள்ளை புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் இந்த வழக்கில் சாமர்த்தியமாக துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடித்ததோடு, கொள்ளை போனதாக சொன்ன தங்க காசுகளையும் மீட்டு விட்டோம். செந்தில்குமார் போலீசை ஏமாற்றப் பார்த்தார். அவர் அதில் ஏமாந்து போனார்.
அவர் தேனியை சேர்ந்தவர்.பி.எஸ்.சி.பட்டதாரி. திருமணமாகி அவருக்கு மனைவி, குழந்தை உள்ளனர்.
அவர் இது போல் திருடிய பணத்தில் சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாக ஒரு ஒட்டல் வைத்துள்ளார். அந்த ஓட்டலை அப்பாதுரைதான் கவனித்து வருகிறார். பல்லடத்தில் கோழிப்பண்ணை வைக்க நிலம் வாங்கி போட்டுள்ளார்.
மேலும் தனது மகன் பெயரில் ஒரு நிதிநிறுவனம் ஒன்றையும் சொந்தமாக தொடங்கி உள்ளார்.


கவனக்குறைவு


முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தினர் இது போல் தங்ககாசுகளை கொண்டு செல்வதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. மேலும் கிலோ கணக்கில் தங்ககாசுகளை கொண்டு செல்லும் போது சரியான தணிக்கை முறையையும் அவர்கள் கையாளவில்லை.
அதை பயன்படுத்திதான் செந்தில்குமார் தனது மோசடியை முதலில் அரங்கேற்றிவிட்டு, அடுத்து அதை சரிகட்ட கொள்ளை நாடகத்தையும் நடத்தி இருக்கிறார்.
இவ்வாறு இணை கமிஷனர் சங்கர் தெரிவித்தார்.
பேட்டியின்போது துணை கமிஷனர் கார்த்திகேயன், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கலிதீர்த்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.


சபாஷ் சென்னை போலீஸ்


இந்த வழக்கில் திறமையாக துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா ஆகியோர் பாராட்டினார்கள். தனிப்படை போலீசாருக்கு இணை கமிஷனர் சங்கர் ரொக்கப் பரிசு வழங்கினார்.
Thanks to OneIndia

நல்லாயிருந்துச்சு, நன்றி...பாடகருக்கு த்ரிஷா பாராட்டு

Posted: 06 Apr 2012 10:17 PM PDT


நல்லாயிருந்துச்சு, நன்றி...பாடகருக்கு த்ரிஷா பாராட்டு
'ஒங்களால எனக்கு பேரு கெடச்சுது. நன்றிண்ணே' என்று ஒரு நடிகையோ, நடிகரோ தனக்காக பாடிய பாடகர்களிடம் பேசியிருக்கிறார்களா? அல்லது இசையமைப்பாளரைதான் பாராட்டியிருக்கிறார்களா? தோண்டி துருவி விசாரித்தாலும் அற்ப சொற்பமாகதான் அப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது கோடம்பாக்கத்தில். ஆனால் பாடகர் பென்னி தயாளுக்கு வந்த போன், மற்ற நடிகைகள் புரிந்து கொள்ள வேண்டிய ஸ்பெஷல் செய்தி.
அடியே கொல்லுதே... ஓமணப்பெண்ணே போன்ற அற்புதமான பாடல்களை தனது தேன்குரலில் பாடியவர்தான் பென்னி தயாள். இவரைதான் விண்ணை தாண்டி வருவாயா வெளியான நேரத்தில் அழைத்து பாராட்டி நன்றியும் சொன்னாராம் த்ரிஷா. (நல்லது, தொடர்ந்து ஃபாலோ பண்ணுங்க தங்கச்சி) அப்படியே இன்னொரு தகவல். இந்த பென்னி தயாள் அடிப்படையில் ஒரு மலையாளி. (தமிழை நம்மை விட அழகாக பேசுவதால் சாருக்கு நம்ம ஊரு அட்ரசை போட்டு ஒரு ரேஷன் கார்டு ரெடி பண்ணேய்ய்ய்ய்ய்ய்.....)
சரி, சாரை பற்றி இப்போ என்ன நியூஸ்? வாழ்க்கை டி.ஜே என்ற பெயரில் தமிழ் பாடல்கள் கொண்ட ஒரு ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். இதில் ஆறு பாடல்கள். ஆறும் ஜோரு...
கிறிஸ்டோபர் பிரதீப் என்பவர் எல்லா பாடல்களையும் எழுதியிருக்கிறார். ஃபர்ஸ்ட் லவ். இதுதான் கண்டென்ட். இதை வச்சுகிட்டு பாட்டு எழுதுன்னு சொல்லிடுவாரு. முதல் காதலில் என்னவெல்லாம் வருமோ, அதையெல்லாம் எழுதிக் கொடுப்பேன். அதே மாதிரிதான் எல்லா பாடல்களுக்கும் சின்னதா ஒரு வரியில் சொல்லி சொல்லி வாங்கினாரு. அப்படி உருவானதுதான் இந்த ஆல்பம் என்கிறார் அவர்.
நாலு வருஷத்துக்கு முன்னாடியே இப்படி ஒரு ஆல்பம் பண்ணனும்னு தயாரிப்பாளர் சார்லஸ் சொன்னார். ஆனால் சினிமாவில் நிறைய பாடி பாடி அனுபவத்தை சேகரித்த பிறகுதான் அதை செய்யணும்னு காத்திருந்தேன். ஓரளவுக்கு அனுபவம் இப்பதான் வந்துச்சு என்கிறார் பென்னி தயாள்.
த்ரிஷாம்மா...இதையும் கேட்டுட்டு ஒரு கருத்து சொல்லுங்கோ...
Thanks to Tamilcinema

எனிமா சாப்பிட்ட இனியா பத்தாம் தேதியிலிருந்து பிஸியாம்...

Posted: 06 Apr 2012 10:13 PM PDT


எனிமா சாப்பிட்ட இனியா பத்தாம் தேதியிலிருந்து பிஸியாம்...
பூ படத்தில் இல்லாத ஓரிடம். இது மலையாள படம் ஒன்றின் டைட்டில். நாகர்கோயிலுக்கு அந்த பக்கம் வரவேண்டிய நியூஸ் எதுக்குய்யா தமிழ்சினிமா.காம் ஏரியாவில்?
அதுலதான் இருக்கு விசேஷம். அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து தான் தூக்கப்பட்டதையே இப்பதான் அறிந்து கொண்டாராம் இனியா. கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தா இந்நேரம் ரெண்டு மூணு படத்துக்கு அட்வான்சை வாங்கிப் போட்டு, அதுல கொஞ்சத்தை எடுத்து அரை கிரவுண்டு எடத்தை வாங்கி போட்டிருக்கலாம். இப்படி மோசம் போயிட்டோமே என்று மூக்கு சிந்தியவர், வேக வேகமாக நாலு மலையாள படங்களை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படத்தோட டைட்டில்தான் இந்த பூ படத்தில் இல்லாத ஓரிடம். ஏப்ரல் 10 ந் தேதியிலிருந்து ஷுட்டிங் கிளம்புகிறார்களாம்.
நம்ம ஊர்ல மேக்கப் மேன் ஒரு படத்துக்காக வாங்குகிற பேட்டா காசு ஆகாது அவங்க கொடுக்கிற முழு படத்துக்கான சம்பளம். இருந்தாலும் நாளைக்கு வர்ற ட்ரிபிள் தேவியை விட இன்னைக்கு வர்ற சிங்கிள் தேவி பெரிசாச்சே?
மவுனகுரு படத்தின் வெற்றி கூட இனியாவுக்கு எந்த வகையிலும் லிஃப்ட் ஆக அமையவில்லை என்பதுதான் இந்த மல்லாங்கிணறு மங்காத்தாவுக்கு வாய்த்த பாழடைந்த அதிர்ஷ்டம்.
Thanks to Tamilcinema

தனுஷுக்கு ஜோடியாகும் பார்வதி மேனன்!

Posted: 06 Apr 2012 10:07 PM PDT


தனுஷுக்கு ஜோடியாகும் பார்வதி மேனன்!
சில வருடங்களுக்கு முன் பூ என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். நிறைய பாராட்டுகளையும் கொஞ்சம் நஷ்டத்தையும் சம்பாதித்த படம் அது.
அந்தப் படத்தோடு தமிழ் சினிமாவில் காணாமல் போனவர் பார்வதி மேனன்.
இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் தனுஷுக்கு ஜோடியாக. ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்.
வந்தேமாதரம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆல்பங்களைப் படமாக்கிய பரத் பாலா இயக்கும் புதிய இந்திப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, பார்வதிதான் அவருக்கு ஜோடி.
படத்தில் தனக்கு யார் நாயகியாக வரவேண்டும் என எந்த விருப்பத்தையும் தனுஷ் தெரிவிக்கவில்லையாம். தயாரிப்பாளரின் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் ஹீரோயினாக்கட்டும் என அமைதி காக்க, பார்வதி வந்திருக்கிறார்.
தனுஷ் ஜோடியாக நடிப்பதில் தனக்கு மிகுந்த திருப்தி என்றும், இந்த வாய்ப்பு தனக்கு புதிய கதவுகளைத் திறக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் பார்வதி.
Thanks to OneIndia

பெப்சி Vs தயாரிப்பாளர்கள்: 'ரகளைபுரமாக' மாறிய கோடம்பாக்கம்!

Posted: 06 Apr 2012 10:05 PM PDT


பெப்சி Vs தயாரிப்பாளர்கள்: 'ரகளைபுரமாக' மாறிய கோடம்பாக்கம்!
இன்றுமுதல் படப்பிடிப்புகள் ரத்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கிடையாது, வெளியூர்களில் படப்பிடிப்பில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் சென்னை திரும்ப வேண்டும்... என்று பெப்சி எனப்படும் தென்னிந்திய சினிமா தொழிலாளர் சம்மேளனம் அறிவிக்க, இதற்கு நேர்மாறான முடிவோடு போலீஸ் துணையுடன் படப்பிடிப்பு நடத்தக் கிளம்பியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.
பெப்சி தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ழிலாளர்களுக்கும்,தயாரிப்பாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு தரப்பினரையும் அழைத்து தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியது.
5 சங்கங்களுக்கான சம்பள உயர்வு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், இருதரப்பிலும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.


வேலை நிறுத்தம்


அதைத்தொடர்ந்து சினிமா தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தார்கள். இன்று (சனிக்கிழமை) முதல் படப்பிடிப்பு, எடிட்டிங், டப்பிங் உள்பட எந்த பணிகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று 'பெப்சி' சார்பில் அறிவிக்கப்பட்டது.
"வேலை நிறுத்தம் செய்ய நாங்கள் தயாராக இல்லை. இன்று முதல் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும்'' என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தார்கள். "எங்களுடன் இணைந்து பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களை வைத்து தனி அமைப்பு உருவாக்கி படப்பிடிப்பு நடத்துவோம்'' என்று அவர்கள் கூறியுள்ளனர்.


டி.ஜி.பி.யுடன் சந்திப்பு


இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத்தலைவர் டி.சிவா, செயலாளர்கள் கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன் மற்றும் பட அதிபர்கள் ஞானவேல்ராஜா, சுபாஷ் சந்திர போஸ், பஞ்சு சுப்பு, சித்ரா லட்சுமணன் ஆகியோர் போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்தை நேற்று சந்தித்து ஒரு மனு கொடுத்தார்கள்.
"ஏப்ரல் 7 முதல் படப்பிடிப்பு நடத்துவதற்கு எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது. போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜத்தை சந்தித்து விட்டு வந்த தயாரிப்பாளர்கள், "இன்று போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெறும்'' என்றனர்.


'பெப்சி' முடிவு


இதுபற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) பொதுச்செயலாளர் ஜி.சிவா கூறுகையில், "திட்டமிட்டபடி, எங்கள் வேலை நிறுத்தம் சனிக்கிழமை முதல் நடைபெறும். வெளியூர் படப்பிடிப்புகளுக்கு சென்றிருந்த 'பெப்சி' தொழிலாளர்கள், சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் அரசு முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்த நிலைக்குக் காரணம் தயாரிப்பாளர்கள்தான். அவர்களின் ஈகோதான். நாங்கள் எவ்வளவோ விட்டுக்கொடுத்துப் பார்த்துவிட்டோம். அடுத்த கட்ட போராட்டம் பற்றி விரைவில் தெரிவிப்போம்,'' என்றார்.


ரகளைபுரம்


நடிகரும், தயாரிப்பாளருமான கருணாஸ் தனது சொந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று (சனிக்கிழமை) ரெட்ஹில்ஸ் அருகே நடத்த திட்டமிட்டுள்ளார்.
"பெப்சி வேலை நிறுத்தத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு தேவைப்படும் தொழிலாளர்களை வைத்து, படப்பிடிப்பை நடத்திக் காட்டுவேன்'' என்று கூறி படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார் அவர்.
இதுபோல் மேலும் சிலதயாரிப்பாளர்களும் போலீஸ் பாதுகாப்புடன் இன்று படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இப்படி சிண்டைப் பிடித்துக் கொண்டு சண்டைப் போட்டபடி தொடங்கவிருக்கும் முதல் படத்தின் பெயர் 'ரகளைபுரம்'. சினிமாக்காரர்களாச்சே... தகராறிலும் ஒரு 'சினிமா டச்' வேண்டுமல்லவா...!
Thanks to OneIndia

Nakeeran 07-04-2012 | Free Download Nakkeeran PDF This week | Nakkheeeran 7th April 2012 Ebook

Posted: 06 Apr 2012 10:00 PM PDT


Nakeeran 07-04-2012 | Free Download Nakkeeran PDF This week | Nakkheeeran 7th April 2012 Ebook
Download link

http://adf.ly/79XOP
http://adf.ly/79XQu


Every File uploading here and our Main Site only.....Pl support us. Come and download here only. Other Sites copying here. PL Support uploader and get quickly your wanted magazines. 

Junior Vikatan 11-04-2012 | Free Download Junior Vikatan PDF This week | Junior Vikatan 11th April 2012 ebook

Posted: 06 Apr 2012 07:40 PM PDT

Junior Vikatan 11-04-2012 | Free Download Junior Vikatan  PDF This week | Junior Vikatan 11th April 2012 ebook
Download Link



Every File uploading here only.....Pl support us come and download here only. Other Sites copying here. PL Support uploader and get quickly your wanted magazines. 

Dinkaran E-paper 07-04-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 7th April 2012

Posted: 06 Apr 2012 07:00 PM PDT

Dinkaran E-paper 07-04-2012 | Free Download Dinakaran Daily PDF today EPaper | Dinakaran 7th April 2012
Download Link

Dinamalar Aanmeegamalar 07-04-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 7th April 2012

Posted: 06 Apr 2012 05:55 PM PDT

Dinamalar Aanmeegamalar 07-04-2012 | Free Download Aanmeegamalar PDF today ebook | Aanmeega Malar 7th April 2012
Download Link

Dinamalar E-paper 07-04-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 7th April 2012

Posted: 06 Apr 2012 05:53 PM PDT

Dinamalar E-paper 07-04-2012 | Free Download Dinamalar PDF today ePaper | Dinamalar 7th April 2012
Download Link

Nadanthathu Enna 06-04-2012 | Vijay Tv Kutram Nadanthathu Enna 6th April 2012

Posted: 06 Apr 2012 10:52 AM PDT


Nadanthathu Enna 06-04-12 | Vijay Tv Kutram Nadanthathu Enna 6th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Azhagi 06-04-2012 | Sun tv Alagi 6th April 2012

Posted: 06 Apr 2012 10:39 AM PDT


Azhagi 06-04-12 | Sun tv Alagi 6th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Aanpavam 06-04-2012 | Sun Tv Aan pavam Serial 6th April 2012

Posted: 06 Apr 2012 10:06 AM PDT


Aanpavam 06-04-12 | Sun Tv Aan pavam Serial 6th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

kana kaanum kalangal 06-04-2012 | Vijay Tv kana kaanum kaalangal Kalluriyin kadhai 6th April 2012

Posted: 06 Apr 2012 10:05 AM PDT


kana kaanum kalangal 06-04-12 | Vijay Tv kana kaanum kaalangal Kalluriyin kadhai 6th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Rudram 06-04-2012 | Jaya Tv Rudram Maha Ragasiyam 6th April 2012

Posted: 06 Apr 2012 09:15 AM PDT


Rudram 06-04-12 | Jaya Tv Rudram Maha Ragasiyam 6th April 2012

Shanthi Nilayam 06-04-2012 | Jaya Tv Santhi Nilayam 6th April 2012

Posted: 06 Apr 2012 09:15 AM PDT


Shanthi Nilayam 06-04-12 | Jaya Tv Santhi Nilayam 6th April 2012

Chellame 06-04-2012 | Sun Tv Chellamey Serial 6th April 2012

Posted: 06 Apr 2012 09:58 AM PDT

Chellame 06-04-12 | Sun Tv Chellamey Serial 6th April 2012







This posting includes an audio/video/photo media file: Download Now

Jaya tv Shows Kadhambari 06-04-2012

Posted: 06 Apr 2012 08:50 AM PDT


Jaya tv Shows Kadhambari 06-04-2012

Saravanan Meenakshi 06-04-2012 | Vijay tv Saravanan Meenachi 6th April 2012

Posted: 06 Apr 2012 09:49 AM PDT


Saravanan Meenakshi 06-04-12 | Vijay tv Saravanan Meenachi 6th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Manvasanai 06-04-2012 | Raj Tv Mann vasanai Serial 6th April 2012

Posted: 06 Apr 2012 08:15 AM PDT


Manvasanai 06-04-12 | Raj Tv Mann vasanai Serial 6th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

Sindhu Bhairavi 06-04-2012 | Raj Tv Sindhu Bairavi Serial 6th April 2012

Posted: 06 Apr 2012 08:13 AM PDT


Sindhu Bhairavi 06-04-12 | Raj Tv Sindhu Bairavi Serial 6th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now

கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி, ஓவியா

Posted: 06 Apr 2012 08:08 AM PDT


போட்டியை சமாளிக்க கவர்ச்சிக்கு மாறிய அஞ்சலி, ஓவியா
அஞ்சலியும், ஓவியாவும் கவர்ச்சிக்கு மாறியுள்ளனர்.சக நடிகைகள் போட்டியை சமாளிக்கவே அவர்கள் ஆடை குறைப்புக்கு சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓவியா 'களவானி' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். கமலுடன் 'மன்மதன் அம்பு' படத்தில் சிறு வேடத்தில் வந்தார். 'மெரினா' படத்திலும் நடித்தார். அனைத்தும் மார்டனாகவும் குடும்ப பாங்கான கேரக்டருமாகவும் இருந்தன.
தற்போது 'மசாலா கபே', 'சிலு சிலுனு ஒரு சந்திப்பு', 'சிவன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'மசாலா கேப்' படத்தில் மட்டும் படு கிளாமராக நடிக்கிறார். இப்படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இதே படத்தில் அஞ்சலியும் கவர்ச்சி வேடத்தில் நடிக்கிறார்.
அஞ்சலியும் இதற்கு முன் குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து வந்தார். இருவரும் இந்த அளவு கவர்ச்சிக்கு இறங்கி இருப்பது திரையுலகினரை பரபரக்க வைத்துள்ளது. அடுத்து நீச்சல் உடையிலும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. 
Thanks to Maalaimalar

எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை - ஜோடியாக நடிக்க ரெடி!- சிம்பு, நயன்தாரா அறிவிப்பு

Posted: 06 Apr 2012 07:58 AM PDT


எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை - ஜோடியாக நடிக்க ரெடி!- சிம்பு, நயன்தாரா அறிவிப்பு
சேர்ந்து நடிப்பதில் எங்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. கால்ஷீட் இருந்தால் ஜோடியாக நடிப்போம், என சிம்புவும் நயன்தாராவும் அறிவித்துள்ளனர்.


இதன் மூலம் கடந்த சில நாட்களாக மாற்றி மாற்றி அறிக்கை விட்டுக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் இணக்கமாகிவிட்டனர்.
சினிமாவில் எது, யார் எப்படி மாறுவார்கள் என்று கணிக்கக் கூட முடியாது. நயன்தாராவும், சிலம்பரசனும் 'வல்லவன்' என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள். அப்போது இருவருக்குமிடையே நெருக்கம் ஏற்பட்டது. ஆனால் திடீரென்று இருவரும் பிரிந்தனர். சிம்பு ஒருபக்கம் லூஸுப்பெண்ணே என சோகம் கீதம் பாட, நயன்தாரா துரோகம் செய்தார் சிம்பு என பேட்டி கொடுக்க... அந்த உறவு முறிந்ததாக அறிவித்துவிட்டனர். 
அதைத்தொடர்ந்து, நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் காதல் மலர்ந்து. மூன்றரை ஆண்டுகள் நெருக்கமாக இருந்து சமீபத்தில் இருவரும் பிரிந்து பேட்டிகள் கொடுத்து வருவது தெரிந்ததே.
இப்போது, ஆரம்பத்தில் பிரிந்த சிம்புவும் நயன்தாராவும் இணக்கமாகி வருகிறார்கள்.
இப்போது சிலம்பரசன் நடிக்கும் 'வாலு' என்ற புதிய படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க கேட்டதாகவும், அப்போது நயன்தாரா தனக்கு ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்றும், தன்னிடம் சிலம்பரசன் நெருங்கி பழகக்கூடாது, கேரவனுக்குள் வந்து பேசக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்ததாகவும் வெளியான தகவல் கடந்த இரு தினங்களாக பரபரப்பான செய்தியாகிவிட்டது.
ஆனால் இதனை இருவருமே இப்போது மறுத்துள்ளனர். இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், "வாலு' பட இயக்குநர் விஜய், அந்த படத்துக்காக என்னிடம் தேதி கேட்டது உண்மை. அந்த படத்துக்கு என்னால் தேதி கொடுக்க முடியவில்லை. நான் இப்போது 3 தெலுங்கு படங்களில் நடிப்பதால், இந்த படத்துக்கும் தேதி கொடுத்தால் குழப்பம் ஏற்படும் என்று அவரிடம் சொன்னேன்.


இதுதொடர்பாக அந்த படத்தின் தயாரிப்பாளர், என்னிடம் பேசவும் இல்லை, நான் எந்த நிபந்தனையும் விதிக்கவும் இல்லை. ரூ.3 கோடி சம்பளம் கேட்கவில்லை. கேரவனுக்குள் சிலம்பரசன் நுழையக்கூடாது என்று நிபந்தனை விதிக்கவும் இல்லை. எந்த தயாரிப்பாளரிடமும் நான் நிபந்தனை விதிப்பதில்லை. அப்படிப்பட்ட பெண் நான் அல்ல.


சிம்புவுடன் நடிப்பதில் ஆட்சேபனை இல்லை


எனக்கு, சிம்புவுடன் எந்த பிரச்சினையும் கிடையாது. அவருடன் நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. என்னிடம் தேதி இருந்தால் மட்டுமே அவர் படத்தில் நடிப்பேன். இல்லையென்றால், நடிக்கமாட்டேன். எனக்கும், அவருக்கும் பிரச்சினை என்று நான் சொல்லவில்லை. நானும், சிம்புவும் சேர்ந்து நடிப்பதாக இருந்தால், ஒன்று அவர் சொல்லவேண்டும், அல்லது நான்தான் சொல்லவேண்டும்," என்றார். 
கால்ஷீட் இருந்தால் நடிப்போம்.
"நயன்தாராவுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. 'வாலு' படத்தில் நடிப்பதற்கு கேட்டபோது, அவர் நிபந்தனைகள் விதித்ததாக வதந்தியை பரப்புகிறார்கள் (வாலு படத்தில் நடிக்க கேட்கவே இல்லை என்று கூறி வந்தார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது).


ஒரு தயாரிப்பாளரோ, டைரக்டரோ அவர்கள் படத்துக்கு நயன்தாராவும், நானும் வேண்டுமென்று விரும்பினால், இருவருக்குமே `கால்ஷீட்' இருந்தால் நடிப்பதில் தப்பில்லை. எங்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை'', என்றார்.
Thanks to OneINdia

Thangam 06-04-2012 | Sun Tv Thangam Serial 6th April 2012

Posted: 06 Apr 2012 08:17 AM PDT

Thangam 06-04-12 | Sun Tv Thangam Serial 6th April 2012


Updating..

Thendral 06-04-2012 | Sun Tv Thendral Serial 6th April 2012

Posted: 06 Apr 2012 09:03 AM PDT


Thendral 06-04-12 | Sun Tv Thendral Serial 6th April 2012

This posting includes an audio/video/photo media file: Download Now